அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான போர் கொள்கையில் திருத்தம் செய்து ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் அறிவித்துள்ளார்.
ரஷியா - உக்ரைன் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், மாஸ்கோவில் பாதுகாப்புப் படைகளின் தளபதிகளுடன் புதன்கிழமை முக்கிய ஆலோசனையில் புதின் ஈடுபட்டார்.
இந்த ஆலோசனையின் முடிவில், எதிரி நாடுகள் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்தும் ரஷியாவின் கொள்கையில் முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது.
முக்கிய திருத்தங்கள்
ரஷியா மீது தாக்குதல் நடத்தும் நாட்டுக்கு அணு ஆயுத உதவிகளை பிற நாடுகள் வழங்கினால், கூட்டுத் தாக்குதலாக கருதப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானங்கள், கப்பல் மற்றும் டிரோன்கள் மூலம் மிகப் பெரிய ஏவுகணைத் தாக்குதலை ரஷியா மீது நடத்தும் பட்சத்தில் அணு ஆயுதங்களை பயன்படுத்த கொள்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி வருகின்றன. இந்த ஆயுதங்களை கொண்டு, உக்ரைனுக்குள் நுழையும் ரஷியப் படைகள் மீது மட்டுமே தாக்குதல் நடத்த வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம், இந்த விதிகளை தளர்த்தி, ரஷியாவுக்குள் நுழைந்து ஆயுதங்களை பயன்படுத்த உக்ரைன் அனுமதி கோரியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அணு ஆயுதக் குறைப்பு எப்போது?

ரஷியா அணு ஆயுதப் போா்ப் பயிற்சி
சுயநல வல்லரசுகள்!

ஈரானுக்கு உதவ ரஷியா தயார்! - விளாதிமீர் புதின்
விடியோக்கள்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India

சூர்யவன்ஷியையும் ஆர்ச்சரையும் மட்டும் நம்புனா...: கில்லி போல் ஆடிய கில்!
Jailer -2 படத்தில் Hrithik Roshan சிறப்புத் தோற்றம்? | Cinema updates |




