வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

அணு ஆயுதப் போருக்கு தயாராகும் ரஷியா? கொள்கையில் திருத்தம்!

அணு ஆயுதங்களை பயன்படுத்துவதற்கான கொள்கையில் ரஷியா திருத்தம்...

News image

விளாதிமீர் புதின் - Aleksei Nikolsky

Updated On :26 செப்டம்பர் 2024, 8:43 am IST

அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான போர் கொள்கையில் திருத்தம் செய்து ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் அறிவித்துள்ளார்.

ரஷியா - உக்ரைன் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், மாஸ்கோவில் பாதுகாப்புப் படைகளின் தளபதிகளுடன் புதன்கிழமை முக்கிய ஆலோசனையில் புதின் ஈடுபட்டார்.

இந்த ஆலோசனையின் முடிவில், எதிரி நாடுகள் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்தும் ரஷியாவின் கொள்கையில் முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது.

முக்கிய திருத்தங்கள்

ரஷியா மீது தாக்குதல் நடத்தும் நாட்டுக்கு அணு ஆயுத உதவிகளை பிற நாடுகள் வழங்கினால், கூட்டுத் தாக்குதலாக கருதப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானங்கள், கப்பல் மற்றும் டிரோன்கள் மூலம் மிகப் பெரிய ஏவுகணைத் தாக்குதலை ரஷியா மீது நடத்தும் பட்சத்தில் அணு ஆயுதங்களை பயன்படுத்த கொள்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி வருகின்றன. இந்த ஆயுதங்களை கொண்டு, உக்ரைனுக்குள் நுழையும் ரஷியப் படைகள் மீது மட்டுமே தாக்குதல் நடத்த வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம், இந்த விதிகளை தளர்த்தி, ரஷியாவுக்குள் நுழைந்து ஆயுதங்களை பயன்படுத்த உக்ரைன் அனுமதி கோரியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.