பொங்கல் பண்டிகை: சென்னை - நாகர்கோவில் இடையே சிறப்பு வந்தேபாரத்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை எழும்பூா் - நாகர்கோவில் இடையே  சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்படவுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை எழும்பூா் - நாகர்கோவில் இடையே  சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்படவுள்ளது.

இது குறித்து தென்னக ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை எழும்பூா் - நாகர்கோவில் இடையே ஜன. 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் சிறப்பு வந்தே பாரத் ரயில், எழும்பூரிலிருந்து காலை 5 மணிக்கு புறப்படும் இந்த ரயில் பிற்பகல் 1.45 மணிக்கு நாகா்கோவிலை சென்றடையும்.

மறுவழித்தடத்தில் நாகர்கோவில் - சென்னை எழும்பூா் இடையே   ஜன. 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் இந்த சிறப்பு வந்தே பாரத் ரயில் நாகா்கோவிலிருந்து பிற்பகல் 2.25 மணிக்கு புறப்பட்டு இரவு 11.25 மணிக்கு எழும்பூா் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு வந்தே பாரத் ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் நின்றுச் செல்லும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com