பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்

அதிக எண்ணிக்கையிலான பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும் என தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

News image
தமிழிசை செளந்தரராஜன்
Updated On :25 ஜனவரி 2024, 1:30 pm

DIN


அதிக எண்ணிக்கையிலான பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும் என தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.  

சென்னை கிண்டியிலுள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில் 2024ஆம் ஆண்டுக்கான தேவி விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. பல்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பை வழங்கிய 11 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. 

தேவி விருதுகள் நிகழ்ச்சியை தொடக்கி வைத்து பேசிய தமிழிசை செளந்தரராஜன், 

பெண்கள் ஆண்களை விட ஆரோக்கியமானவர்கள். பெண்களுக்கு உடல்நிலை சரியில்லாதபோது குறித்த நேரத்தில் அவர்களுக்கு மருத்துவ சேவை கிடைப்பதில்லை.

விமானிகள் அதிக எண்ணிக்கையில் உருவாகியுள்ளனர். சந்திரயான் போன்ற திட்டங்களில் பெண்களின் பங்கு அதிகரித்துள்ளது. கல்வி நிறுவனங்களில் இன்றும் பெண்களின் விகிதம் குறைவாகவே உள்ளது. 

குறைந்தபட்சம் சட்டம் மட்டுமே  தற்போது பெண்களைக் காக்கிறது. பெண்கள் மிகவும் தைரியமுடன் இருக்க வேண்டும். 

சவாலான சூழலில் அழாதீர்கள். என்னை தலைக்குனிய வைத்தால், நான் முன்பை விட வலிமையாக நடக்க வேண்டும் என எண்ணுவேன். 

நான் உயரத்தில் வேண்டுமானால் சிறியவளாக இருக்கலாம். ஆனால் திறமையில் மிகவும் உயரம். நம்மை காயப்படுத்தும் சமூகத்தில் நாம் மீண்டும் வலிமையுடன் நடைபோட வேண்டும்.

செய்யும் வேலையை முழு விருப்பத்துடன் செய்ய வேண்டும். அப்படி செய்தால் உடலில் சோர்வு இருக்காது. புதுச்சேரிக்கும் தெலங்கானாவுக்கும் பணிநிமித்தமாக செல்கிறேன். அதனை முழு மனதுடன் செய்வதால் சோர்வு ஏற்படாது எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.