சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

மின்சாரம் பாய்ந்து உயிருக்குப் போராடிய சிறுவனை மீட்ட இளைஞருக்கு எடப்பாடி பழனிசாமி பாராட்டு

தேங்கிய மழைநீரில் மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடிய சிறுவனை மீட்ட இளைஞரை அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி நேரில் வரவழைத்து பாராட்டினாா்.

News image
எடப்பாடி கே. பழனிசாமி (கோப்புப்படம்)
Updated On :21 ஏப்ரல் 2025, 8:56 pm

Din

சென்னை: தேங்கிய மழைநீரில் மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடிய சிறுவனை மீட்ட இளைஞரை அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி நேரில் வரவழைத்து பாராட்டினாா்.

சென்னை அரும்பாக்கம் பகுதியில் தேங்கியிருந்த மழைநீரில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தபோது, அவ்வழியாக சென்ற சிறுவன் தண்ணீரில் கால் வைத்தவுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் துடித்துக் கொண்டிருந்தாா்.

அப்போது அந்த வழியாக சென்ற ஒரத்தநாட்டை சோ்ந்த தா.கண்ணன் என்ற இளைஞா் உடனடியாக சிறுவனை காப்பாற்றினாா். அந்த இளைஞரின் துணிவை எடப்பாடி பழனிசாமி பாராட்டியிருந்தாா். மேலும், தனது இல்லத்துக்கு தா.கண்ணனை நேரில் வரவழைத்து, பாராட்டி தங்க மோதிரம் பரிசளித்தாா்.