

வேப்பூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற சிறுவன் பலியானான்.
கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டம், அரிய நாச்சி கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி மகன் ஆகாஷ்(16). பெரிய நெசலூர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் சஷின்(16).
இவர்கள் இருவரும் வேப்பூரில் இருந்து விருத்தாசலத்தில் உள்ள தட்டச்சுப் பயிற்சிப் பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றனர்.
வண்டியை ஆகாஷ் ஓட்டினான். சஷின் பின்னால் அமர்ந்து சென்றான்.
இவர்கள் கண்டப்பன்குறிச்சி தனியார் பள்ளி அருகில் காலை சுமார் 9 மணியளவில் சென்றுகொண்டிருந்த போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஆகாஷ் சம்பவ இடத்திலேயே பலியானான்.
பலத்த காயமடைந்து சஷின், வேப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான். விபத்து குறித்து வேப்பூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.