திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

பத்ம விருதுகள் விழாவில் பங்கேற்ற பிரபலங்கள்!

அஜித் குமார், ரவிச்சந்திரன் அஸ்வின், தாமு, ராதாகிருஷ்ணன் தேவசேனாதிபதி உள்ளிட்டோர் விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.

News image
பத்ம விருதளிக்கும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு
Updated On :28 ஏப்ரல் 2025, 3:04 pm

DIN

தில்லியில் பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த அஜித் குமார், ரவிச்சந்திரன் அஸ்வின், தாமு, ராதாகிருஷ்ணன் தேவசேனாதிபதி உள்ளிட்டோர் விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.

இதில் நடிகர் அஜித் குமார், நல்லி குப்புசாமி, ஷோபனா ஆகியோருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.

ஒவ்வோர் ஆண்டும் குடியரசு தின விழா நிகழ்வின்போது பத்ம விருதுகள் அறிவிக்கப்படும் நிலையில், 2025-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிப்பை மத்திய அரசு ஜன. 25ஆம் தேதி வெளியிட்டது.

சமூகப் பணி, பொது விவகாரம், அறிவியல் மற்றும் பொறியியல் துறை, மருத்துவம், இலக்கியம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பை அளித்தவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன

இந்த ஆண்டில் 7 பேருக்கு பத்ம விபூஷண் விருதும், 19 பேருக்கு பத்ம பூஷண் விருதும், 113 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது.

தமிழகத்தைச் சேர்ந்த 13 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன.

தமிழகத்தில் 3 பேருக்கு பத்ம பூஷண்

தமிழகத்தில் நடிகா் அஜித் குமாா், நடிகை ஷோபனா, நல்லி குப்புசாமி செட்டி ஆகிய மூவருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.

தமிழகத்தைச் சேர்ந்த 10 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது

குருவாயூர் துரை (கலை)

கே.தாமோதரன் (சமையல் கலை)

லட்சுமிபதி ராமசுப்பையர் (இலக்கியம் - கல்வி - இதழியல்)

எம்.டி.ஸ்ரீனிவாஸ் (அறிவியல் - பொறியியல்)

புரசை கண்ணப்ப சம்பந்தன் (கலை)

ரவிச்சந்திரன் அஸ்வின் (விளையாட்டு - கிரிக்கெட்)

ஆர். ஜி. சந்திரமோகன் - (தொழில்துறை)

ராதாகிருஷ்ணன் தேவசேனாதிபதி (கலை)

ஸ்ரீனி விஸ்வநாதன் (இலக்கியம் - கல்வி)

வேலு ஆசான் (கலை, பறை இசை)

இதேபோன்று தொழில் துறையில் குஜராத்தைச் சேர்ந்த பங்கஜ் பட்டேல், கலைத் துறையில் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சேகர் கபூர், கர்நாடகத்தைச் சேர்ந்த இசைக் கலைஞர் லக்‌ஷ்மிநாராயணா சுப்ரமணியம் உள்ளிட்டோர் பத்ம பூஷண் விருதைப் பெற்றுக்கொண்டனர்.

கேரளத்தைச் சேர்ந்த ஹாக்கி வீரர் பி.ஆர். ஸ்ரீஜேஸுக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. ஆந்திரத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணாவுக்கும் பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.

இசைத் துறையில் ரிக்கி கேஜ், அர்ஜித் சிங் உள்ளிட்டோருக்கும் பத்ம ஸ்ரீ வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டு உயிரிழந்த பங்கஜ் உத்தாஸுக்கு அவரின் மறைவுக்குப் பிறகு கெளவரம் வழங்கப்பட்டது. அவருக்கு அறிவிக்கப்பட்ட பத்ம பூஷண் விருதை அவரின் மனைவி பெற்றுக்கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.