பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

மன்னார்குடியில் பற்றி எரிந்த மின் வாகனம்!

மன்னார்குடியில் பற்றி எரிந்த மின் வாகனம் குறித்து...

News image

தீப்பற்றி முற்றிலும் எரிந்தழிந்த மின்சார இருசக்கர வாகனம்.

Updated On :5 ஆகஸ்ட் 2025, 4:52 am

மன்னார்குடியில் மின்சார இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்தவர் தங்கமணி. இவர் ருக்மணி பாளையம் நடுத்தெருவில் உள்ள தனியார் திரையரங்கம் எதிரில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.

இவர், கோமாக்கி நிறுவனத்தின் மின்சார இருசக்கர வாகனத்தை கடந்த 4 ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில், திங்கள்கிழமை இரவு கடை வாசலில் நின்ற இருசக்கர வாகனத்தை இயக்கியபோது, வாகனத்திலிருந்து புகை வர தொடங்கியது. பின்னர், அதிக புகை வெளியேறி வாகனம் தீப்பிடித்து எரிய தொடங்கியது. அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு கருவி மூலமும் தண்ணீர் கொண்டும் தீயை அணைக்க முயன்றனர்.

தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் அளிக்கப்பட்டது. எனினும் தீயணைப்பு வாகனம் வருவதற்கு முன்பாகவே வாகனம் முற்றிலும் எரிந்தழிந்தது.

அவ்வப்போது எங்காவது ஒரு இடத்தில் மின்சார பைக் தீப்பிடிக்கும் சம்பவம் வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது, மன்னார்குடியில் இருசக்கர மின் வாகத்தை இயக்கியபோது தீப்பிடித்து எரிந்தழிந்த சம்பவம் அங்குள்ள சிசிடி கேமராவில் பதிவாகி, தற்போது அது சமுக வலைதளங்களில் பரவி வருவதால், மின்சார வாகனங்கள் வைத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து, மன்னார்குடி நகர காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

CCTV footage of an incident in which an electric two-wheeler caught fire in Mannargudi has been released, causing a stir.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.