டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பாமக மகளிர் மாநாடு: பூரண மதுவிலக்கு உள்பட 14 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையிலான மகளிர் பெருவிழா மாநாட்டில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

News image
பாமக மகளிர் மாநாட்டு மேடையில்...
Updated On :10 ஆகஸ்ட் 2025, 2:04 pm

இணையதளச் செய்திப் பிரிவு

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் வன்னியர் சங்கம் சார்பில் மகளிர் பெருவிழா மாநாடு இன்று (ஆக. 10) நடைபெற்றது.

பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ராமதாஸின் மகள் காந்திமதி முதல் தீர்மானத்தை வாசித்தார். அதனைத் தொடர்ந்து மற்ற பெண் நிர்வாகிகளும் தீர்மானத்தை வாசித்தனர்.

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த வேண்டும்

வேலையில்லா திண்டாட்டத்தை போக்க வேலை வாய்ப்பை அதிகரிக்க வேண்டும்.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. இதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனையை ஒழிக்க வேண்டும்.

நீட் தேர்வுக்குச் செல்லும் மாணவிகள் சோதனை என்ற பெயரில் மன வேதனைக்குள்ளாக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

பள்ளி, கல்லூரி, பணிபுரியும் இடங்களில் பாலியல் தொல்லை அதிகரித்து வருவதால், அப்பகுதிகளில் பெண் காவலர்களை நியமிக்க வேண்டும்.

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் நாள்களின் எண்ணிக்கை மற்றும் கூலியை உயர்த்த வேண்டும்.

பெண்கள் தொழில் கல்வி, ஆராய்ச்சி கல்வி பெறும் வகையில் கூடுதலாக மகளிர் பல்கலைக் கழகம் உருவாக்கப்பட வேண்டும்.

ஏழை, எளிய, நடுத்தரப் பெண்கள் கர்பப்பை, மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருவதால், அவர்களுக்கு இலவச மருத்துவ சேவை வழங்க வேண்டும்.

வன்னியர்களுக்கு 10.5% ஒதுக்கீடை காலம் தாழ்த்தாமல் ஒதுக்கிட வேண்டும்.

தமிழ்நாட்டில் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்.

காவிரி பாசன மாவட்டங்களில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் தொடக்கப்பட வேண்டும்.

வறுமையில் வாடும் மீனவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.

summary

A women's conference was held today on behalf of the Vanniyar Sangam in Poombukari, Mayiladuthurai district

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.