மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் தீ விபத்து!

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் ஏற்பட்ட தீ விபத்து பற்றி...

News image
தீ விபத்து நாசமான மருத்துவக் கருவிகள்- DPS
Updated On :11 ஆகஸ்ட் 2025, 5:30 am

தினமணி செய்திச் சேவை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலுள்ள ஒரு வார்டில் திங்கள்கிழமை அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில், அந்த வார்டு முழுவதும் எரிந்து நாசமானது. அதிர்ஷ்டவசமாக அப்போது வார்டில் பணியாளர்கள் மற்றும் நோயாளிகள் இல்லாததால் உயிர் சேதம் நிகழவில்லை.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தரைத் தளத்தில் ஹெச்டியு என்றழைக்கப்படும் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான ஒரு தனிப்பிரிவு செயல்பட்டு வருகிறது.

தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாறுவதற்கு முன்பு இந்த வார்டில் வைத்திருந்து, நோயாளரின் தீவிரத் தன்மைக் குறித்து முடிவு செய்து பிறகு சாதாரண வார்டுக்கு மாற்றுவார்கள்.

இந்த வார்டில் திங்கள்கிழமை அதிகாலை 4 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வார்டுக்குள் இருந்து அதிகளவில் புகை வெளியேறுவதைக் கண்ட மருத்துவமனைப் பணியாளர்கள் தீயணைப்புத் துறைக்கும் போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயற்சித்தும், வார்டிலுள்ள மருத்துவக் கருவிகள், படுக்கைகள் முற்றிலும் எரிந்து நாசமாயின.

நல்வாய்ப்பாக அந்த வார்டில் நோயாளர்களோ, மருத்துவப் பணியார்களோ அப்போது இல்லை.

மருத்துவக் கல்லூரி முதல்வர் எஸ். கலைவாணி உள்ளிட்டோரும் நேரில் பார்வையிட்டனர்.

Story image

மருத்துவ உபகரணங்களில் இருந்து ஏற்பட்ட மின்சாரக் கசிவு இந்த விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

summary

A fire broke out in a ward at the Pudukkottai Government Medical College Hospital early Monday morning.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.