மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ் மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

வால்பாறையில் சிறுவனைக் கொன்ற கரடி! அச்சத்தில் மக்கள்!

வால்பாறையில் கரடியொன்று 8 வயது வடமாநில சிறுவனைக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News image

வால்பாறை அரசு மருத்துவமனை

Updated On :12 ஆகஸ்ட் 2025, 10:52 am IST

வால்பாறையில் கரடியொன்று 8 வயது வடமாநில சிறுவனைக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், வால்பாறை அருகே பச்சைமலை எஸ்டேட்டில் கடந்த ஜூலை மாதம் தனது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை கரடி கொன்றது.

சிறுமியின் தாய் கண் முன்னே இந்தச் சம்பவம் நடைபெற்ற நிலையில், நீண்ட தேடுதலுக்குப் பிறகு புதருக்குள் இருந்து சிறுமியின் உடல் எடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, வனத்துறையினர் வைத்த கூண்டில் கரடி அகப்பட்டது. கரடியை மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர். அந்த சோகம் மறைவதற்குள் மீண்டும் ஒரு துயரம் அரங்கேறி உள்ளது.

வால்பாறை நீர்வீழ்ச்சி அருகே உள்ள பகுதியில் தங்கி பணி புரிந்து வரும் வடமாநில தொழிலாளர்களின் 8 வயது மகன் நூர் இஸ்லாம் இன்று(ஆக. 12) தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டு இருந்தான்.

அப்போது, அங்கு வந்த கரடி ஒன்று, சிறுவனை கவ்விக் கொண்டு சென்றது. இதனை அறிந்த கதறிய சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வனத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

அங்கு வந்த வனத் துறையினர் சிறுவனை தேடினர். அப்பொழுது வீட்டின் அருகே உள்ள புதருக்குள் சிறுவன் சடலமாக கிடந்தான். உடலை மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வால்பாறையில் அடுத்தடுத்து நடைபெறும் கரடி தாக்குதல்களால் அங்கு வசிக்கும் வடமாநில தொழிலாளர்கள் அச்சத்தில் ஆழ்ந்து உள்ளனர். கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக நடைபெற்று வரும் கரடி தாக்குதல்களில் இது நான்காவது உயிரிழப்பாகும்.

Summary

The incident in Valparai where a bear killed an 8-year-old boy from the northern state has caused tragedy in the area.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.