மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

13 மாடுகளை வேட்டையாடிய புலியைப் பிடிக்க கும்கி யானைகள் வரவழைப்பு!

புலியைப் பிடிக்க கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டது தொடர்பாக...

News image

கும்கி யானைகள் (கோப்புப்படம்)

Updated On :12 ஆகஸ்ட் 2025, 6:27 am

நீலகிரி மாவட்டத்தில் 13 வளர்ப்பு மாடுகளை வேட்டையாடிய புலியைப் பிடிக்க 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்டத்தைச் சுற்றியுள்ளப் பகுதியில் புலி, காட்டெருமை, கரடிகளின் நடமாட்டம் நாளுக்குநாள் அதிகரித்துக் காணப்படுகிறது.

தேவர்சோலை பேரூராட்சிக்கு உள்பட்ட சர்க்காா் மூலை, பாடந்தொரை ஆகிய பகுதிகளைச் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த ஒரு மாத காலமாக குடியிருப்பு பகுதிக்குள் புலி நுழைந்து விவசாயிகளின் கால்நடைகளைக் கொன்று பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது.

இந்தப் புலியை கூண்டுவைத்து பிடிக்கவும், பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தியும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.

புலியைப் பிடிக்க தேவர்சோலை, சர்க்காா் மூலை பகுதியில் மூன்று கூண்டுகளை அமைத்து வனத் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில், 13 மாடுகளை வேட்டையாடிய புலியைப் பிடிக்க 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

முதுமலையில் இருந்து வந்துள்ள விஜய், வசீம் ஆகிய இரு கும்கி யானைகள் மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Summary

Two Kumki elephants have been called in to capture a tiger that hunted 13 domesticated cows in the Nilgiris district.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.