தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பழங்குடியின சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை!

பழங்குடியின சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

News image

வெங்கடேசன்.

Updated On :12 ஆகஸ்ட் 2025, 7:07 am

இணையதளச் செய்திப் பிரிவு

பழங்குடியின சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து, திருவள்ளூர் போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருத்தணி அருகே பழங்குடியின சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், இளைஞருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து திருவள்ளூர் போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த வி.கே.என்.கண்டிகை பகுதியைச் சேர்ந்த 15 வயது பள்ளி சிறுமியை, கடந்த 2021-இல் அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன்(24) என்பவர், ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸோர் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் சிறையில் இருந்த வெங்கடேசன் பிணையில் வெளியே வந்தார். தொடர்ந்து, இந்த வழக்கு திருவள்ளூர் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இவ்வழக்கின் இறுதி விசாரணை, போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உமா மகேஸ்வரி முன்பாக புதன்கிழமை வந்தது. அப்போது, குற்றம் உறுதியானதால் வெங்கடேசனுக்கு 12 ஆண்டுகள் ஆயுள் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பு வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, வெங்கடேசனை திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் பதுகாப்பாக அழைத்துச் சென்று புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்குரைஞராக விஜயலட்சுமி ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

The Tiruvallur POCSO court has sentenced a youth to life imprisonment for sexually assaulting a tribal girl.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.