48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

‘தாயுமானவர் திட்டம்’ இந்தியாவுக்கே முன்மாதிரி! - விடியோ வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

‘தாயுமானவர் திட்டம்’ இந்தியாவுக்கே முன்மாதிரி என தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் விடியோ வெளியிட்டுள்ளதைப் பற்றி...

News image

முதல்வர் ஸ்டாலின்.

Updated On :12 ஆகஸ்ட் 2025, 2:44 am

‘முதல்வரின் தாயுமானவர் திட்டம்’ இந்தியாவுக்கே முன்மாதிரி என தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் விடியோ வெளியிட்டுள்ளார்.

முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருள்களை வழங்கக்கூடிய ‘முதல்வரின் தாயுமானவர்’ திட்டத்தை சென்னை தண்டையாா்பேட்டையில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கவிருக்கிறார்.

தனியாக வசிக்கும் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு ரேஷன் பொருள்களை நேரடியாக அளிக்கும் இந்தத் திட்டத்தில், 20,42,657 முதியவர்கள், 1,27,797 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 21,70,454 பேருக்கு வீடு தேடி ரேஷன் பொருள்கள் வழங்கப்பட உள்ளன.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் விடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்துப் பார்த்து செய்துவருகிறது. அந்த வரிசையில் எனது மனசுக்குப் பிடித்த திட்டமாக இந்த ‘முதல்வரின் தாயுமானவர்’ திட்டம் உருவாகியுள்ளது.

வயதுக்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு ரேஷன் பொருள்களை நேரடியாக அளிக்கும் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அரசின் சேவைகளை வீடுகளுக்கேச் சென்று கொடுப்பது, இந்தியாவுக்கே முன்மாதிரி முயற்சி.

திட்டத்தை அறிவித்தவுடனே நமது கடமை முடிந்துவிட்டதாக நாம் நினைப்பது இல்லை. அந்தத் திட்டத்தின் பயன் கடைக்கோடி மனிதருக்கும் சென்று சேருகிறதா என்பதைக் கண்காணிப்பதையும் என்னுடைய கடமையாகக் கருதுகிறேன்.

பொருள்கள் வாங்குவதில் உள்ள சிரமத்தை கருத்தில் கொண்டு, இந்தத் திட்டத்தை உருவாக்கியுள்ளோம். தாயுமானவர் திட்டத்தை 34,809 தியாய விலைக் கடைகளில் செயல்படுத்தப்போகிறோம்; 70 வயதுக்கு மேற்பட்ட 20,42,657 மூத்த குடிமக்கள், 1,27,797 மாற்றுத் திறனாளிகள் என 21,70,454 பேர் இத்திட்டத்தின் மூலம் பயனடையப் போகிறார்கள்.” என விடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

Summary

'Thayumanavar Scheme' is a scheme that really appeals to me! - Chief Minister Stalin releases video

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.