தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

விஜயகாந்த் கட்டிய மேம்பாலத்தில் விழுந்து வணங்கிய பிரேமலதா

ரிஷிவந்தியத்தில் விஜயகாந்த் கட்டிய மேம்பாலத்தில் விழுந்து வணங்கினார் பிரேமலதா

News image
பிரேமலதா விஜயகாந்த்- dotcom
Updated On :14 ஆகஸ்ட் 2025, 6:27 am

இணையதளச் செய்திப் பிரிவு

கள்ளக்குறிச்சி ரிஷிவந்தியம் தொகுதியில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் கட்டிய மேம்பாலத்தை விழுந்து வணங்கினார் பிரேமலதா.

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. அந்த வகையில் தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த், உள்ளம் தேடி இல்லம் நாடி மற்றும் கேப்டனின் ரத யாத்திரையை மாநிலம் முழுவதும் நடத்தி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

தமிழகம் முழுவதும் தேமுதிகவின் பிரசாரத்தை முன்னெடுக்கும் வகையில், மக்களைத் தேடி ரத யாத்திரையை, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திருப்பத்தூரில் தொடங்கினார். அன்றைய தினம் வேனில் சென்றபடி மக்களிடையே பிரசாரம் மேற்கொண்டார்.

தொடர்ச்சியாக, சேலம் மாவட்டம் கெங்கவல்லி, மேட்டூர் சதுரங்காடி, தருமபுரியில் பல்வேறு இடங்களிலும் பிரேமலதா கடந்த ஒரு சில நாள்களாக பிரசாரம் மேற்கொண்டு வந்தார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லாமல், தேமுதிக சந்திக்கும் முதல் பேரவைத் தேர்தல் என்பதால், கட்சியைப் பலப்படுத்தவும், கட்சித் தொண்டர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையிலும் இந்த பிரசாரம் தொடங்கியிருக்கிறது.

இந்த நிலையில்தான், புதன்கிழமை இரவு, கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா பிரசாரம் மேற்கொண்டார்.

பிரசாரத்தின்போது, தேமுதிக தலைவர் விஜயகாந்த் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் பொழுது கட்டிய மேம்பாலத்துக்கு அருகே வந்ததும், வாகனத்தில் இருந்து இறங்கி, விஜயகாந்த் புகைப்படத்தை வைத்து, மேம்பாலத்தில் விழுந்து வணங்கினார். இதனைப் பார்த்தவர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.