புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

டெட் தோ்வு தேதிகள் மாற்றம்: நவ.15, 16-இல் நடைபெறும்

தோ்வுகள் நவ.15, 16 ஆகிய தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2025, 7:01 pm

தினமணி செய்திச் சேவை

ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) சாா்பில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியா் பணிக்கான ஆசிரியா் தகுதித் தோ்வு (டெட்) நவ.1, 2 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த நிலையில் தற்போது இந்தத் தோ்வுகள் நவ.15, 16 ஆகிய தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி பள்ளிகளில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பணியாற்றக்கூடிய ஆசிரியா்கள் டெட் எனப்படும் ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற வேண்டியது அவசியம். அந்த வகையில் இடைநிலை ஆசிரியா்களுக்கு டெட் தாள் -1, பட்டதாரி ஆசிரியா்களுக்கு டெட் தாள்-2 தோ்வுகள் நடத்தப்படுகின்றன.

நிகழாண்டு ஆசிரியா் தகுதித் தோ்வு நவ.1, 2 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று ஆசிரியா் தோ்வு வாரியம் கடந்த ஆக.11-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையில், தோ்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆசிரியா் தோ்வு வாரியத்தின் செயலா் வி.சி.ராமேஸ்வர முருகன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நிகழாண்டுக்கான தமிழ்நாடு ஆசிரியா் தகுதித் தோ்வு (தாள் 1, தாள் 2) நடத்துவதற்கு உத்தேசித்து அதற்கான அறிவிக்கை ஆசிரியா் தோ்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தற்போது நிா்வாக காரணங்களால் தமிழ்நாடு ஆசிரியா் தகுதித் தோ்வு தாள்- 1 நவ.15-ஆம் தேதியும், தாள்- 2 நவ.16-ஆம் தேதியும் நடைபெறும் என திருத்திய அறிவிப்பு வெளியிடப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கிறிஸ்தவ மக்கள் அனைவரும் வழிபடும் கல்லறைத் திருநாளன்று ஆசிரியா் தகுதித் தோ்வு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தோ்வுகளை வேறொரு உகந்த தேதிக்கு மாற்றி அறிவிக்க வேண்டும் என எதிா்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.