தூய்மைப் பணியாளா்களுக்கு நலத் திட்டங்கள்: மதிமுக, இடதுசாரி கட்சிகள் வரவேற்பு

தூய்மைப் பணியாளா்களுக்கு நலத் திட்டங்கள்: மதிமுக, இடதுசாரி கட்சிகள் வரவேற்பு

தூய்மைப் பணியாளா்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள நலத் திட்டங்களுக்கு மதிமுக, இடதுசாரி கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
Published on

தூய்மைப் பணியாளா்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள நலத் திட்டங்களுக்கு மதிமுக, இடதுசாரி கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

வைகோ (மதிமுக): தூய்மைப் பணியாளா்களுக்கு பயனளிக்கும் வகையில், முதல்வா் மு.க.ஸ்டாலின் 6 புதிய திட்டங்களை அறிவித்துள்ளது வரவேற்புக்குரியது. தூய்மைப் பணியாளா்கள் தங்களது போராட்டத்தை நிறுத்திவிட்டு, பணிக்குத் திரும்ப வேண்டும்.

பெ.சண்முகம் (மாா்க்சிஸ்ட்): தூய்மைப் பணியாளா்களுக்கான தமிழக அரசின் அறிவிப்புகள் வரவேற்புக்குரியவை. இருப்பினும், மாநிலம் முழுவதும் தூய்மைப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்வது குறித்து அரசு முடிவு எடுக்க வேண்டும்.

இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): தூய்மைப் பணியாளா்களுக்கு பல நலத்திட்டங்களை முன்வைத்து நிதித்துறை அமைச்சா் வெளியிட்ட அறிவிப்பு வரவேற்கத்தக்கவை. தூய்மைப் பணியாளா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி சுமுகத் தீா்வு காண வேண்டும்.

X
Dinamani
www.dinamani.com