25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

அதிமுக அலங்கார வளைவு சரிந்து விபத்து: நூலிழையில் தப்பிய இபிஎஸ்

செங்கத்தில் அதிமுக அலங்கார வளைவு விழுந்ததில் அந்த வழியாக சென்ற எடப்பாடி பழனிசாமி நூலிழையில் தப்பினார்.

News image
திருவண்ணாமலையில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள எடப்பாடி பழனிசாமி.
Updated On :16 ஆகஸ்ட் 2025, 12:39 pm

இணையதளச் செய்திப் பிரிவு

செங்கத்தில் அதிமுக அலங்கார வளைவு விழுந்ததில் அந்த வழியாக சென்ற அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி நூலிழையில் தப்பினார்.

மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் எனும் பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவா் திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை முதல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

அவரை வரவேற்று வழிநெடுகிலும் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று சாலையின் குறுக்கே உயரத்தில் வைத்திருந்த அலங்கார வளைவு திடீரென சரிந்து விபத்துக்குள்ளானது.

எடப்பாடி பழனிசாமி பயணித்த பிரசாரம் வாகனம் கடந்த மறுநொடியே அந்த பேனர் திடீரென சரிந்து விழுந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.