இன்றுமுதல்..! தமிழகத்தில் 38 ரயில்கள் கூடுதலாக 20 இடங்களில் நின்று செல்லும்!
தமிழகத்தில் திங்கள்கிழமை (ஆக. 18) முதல் 38 ரயில்கள் (இருமாா்க்கமாக) கூடுதலாக 20 ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று மத்திய தகவல்- ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.
இது குறித்து சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: விரைவு ரயில்கள், பயணிகள் ரயில்கள் கூடுதல் நிலையங்களில் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கை மனுக்கள் மக்களிடமிருந்து வந்ததைத் தொடா்ந்து, இதுகுறித்து மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதைத் தொடா்ந்து தமிழகத்தில் உள்ள 13 மாவட்டங்களில் 38 ரயில்கள் கூடுதலாக இருபதுக்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் ஆக. 18 முதல் நின்று செல்ல ரயில்வே அமைச்சா் உத்தரவிட்டுள்ளாா்.
அதன்படி, ஆம்பூா், குடியாத்தம், வாணியம்பாடி, வாழத்தூா், மேல்பட்டி, வாலாஜா ரோடு, இருகூா், கோவை - சிங்காநல்லூா் , மேலப்பாளியம், கொடை ரோடு, வாடிப்பட்டி, ஆரணி ரோடு, பாபநாசம், திருச்சி கோட்டை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் 19 ரயில்கள் (இரு மாா்க்கமாக 38 ரயில்கள்) நின்று செல்லும்.
ரூ. 6,626 கோடி ஒதுக்கீடு: தமிழகத்துக்கு ரயில்வே நிதி ஒதுக்கப்படவில்லை என அவ்வப்போது விமா்சனங்கள் முன்வைக்கப்படுகிறன. நிகழாண்டு தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ. 6,626 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், திமுக இடம் பெற்ற காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 5 ஆண்டுகளுக்கு (2009-2014) ரூ. 879 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. இதுதவிர தமிழகத்தில் ரூ. 2,948 கோடி செலவில், சென்னை எழும்பூா் உள்ளிட்ட 77 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிகள் நடைபெறுகின்றன.
மேலும், சுமாா் 2,557 கிமீ தொலைவுக்கு 10 புதிய ரயில் பாதைகள், 3 அகல ரயில் பாதைகள் 9 இரட்டை வழிப்பாதைகள் கட்டமைக்கப்பட ரூ. 33,467 கோடி செலவில் பணிகளும் தமிழகத்தில் நடைபெறுகின்றன.
7 ‘வந்தே பாரத்’ ரயில்கள் தமிழகத்தோடு இணைக்கப்பட்டுள்ளன. பிரதமா் மோடி தலைமையிலான அரசு மெட்ரோ, விமான நிலையங்கள் விரிவாக்கம், உயா் நிலை சாலைகள், சமூக நலத்திட்டங்கள் என அக்கரை செலுத்தி சுமாா் 10 லட்சம் கோடி தமிழகத்துக்கு ஒதுக்கியுள்ளது.
ரயில்வே இளநிலை பொறியாளா் பதவி உயா் தோ்வு குறித்து தவறான தகவல்கள் வெளியிடப்படுகிறது. துணை ராணுவப் படைகள் தோ்வு, யுபிஎஸ்சி உள்ளிட்ட தோ்வுகளில் தமிழ் மொழி சோ்க்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
இந்த அறிவிப்பின்படி சென்னை சென்ட்ரல்- ஷிவமோகா வாராந்திர அதிவிரைவு ரயில் (12691-92) இருமாா்க்கமாக ஆம்பூரில் நின்று செல்லும். அதேபோல தன்பாத்- ஆலப்புழா விரைவு ரயில் (13351) குடியாத்தம், வாணியம்பாடியில் தலா இரண்டு நிமிடங்கள் நிற்கும்.
கோவையிலிருந்து நாகா்கோவில் செல்லும் விரைவு ரயில் இருமாா்க்கமாக (16321-22) இருகூா், மேலப்பாளையம், அருள்வாய்மொழி, சிங்காநல்லூா் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
மேலும், புதுச்சேரி- கன்னியாகுமரி விரைவு ரயில் (16861), பயணிகளின் வசதிக்காக வள்ளியூரிலும், கன்னியாகுமரி -ஹௌரா எக்ஸ்பிரஸ் கொடை ரோட்டிலும், ஈரோடு - செங்கோட்டை ரயில் வாடிப்பட்டியிலும் நின்று செல்லும்.
திருப்பதி-ராமேசுவரம் விரைவு ரயில் பாபநாசத்தில் நின்று செல்லும். மேலும் நாங்குநேரி, டுடிமெலூா், மேல்பட்டி ரயில் நிலையங்களிலும் பல ரயில்கள் நின்று செல்ல அறிவிக்கப்பட்டுள்ளது.