ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளாட்சித் துறை ஊழியர்கள் குடியேறும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் ஐந்து அம்ச கோரிக்கை வலியுறுத்தி, குடியேறும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்தப் போராட்டத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளனர். உரிய நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அவர்கள், ஊராட்சியில் பணியாற்றும் இயக்குநர்களுக்கு ஐந்தாம் தேதிக்குள் ஊதியம் வழங்கப்பட வேண்டும், சிறப்பு படியாக ரூ. 200 வழங்க வேண்டும். அந்தந்தத் தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் ஊதியம் வழங்க வேண்டும்.
மருத்துவக் காப்பீடு அட்டை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தப் போராட்டத்தில் நிர்வாகிகள் எஸ். ஏ. சந்தானம், ஆர். குருவேல், அய்யாதுரை, எஸ். பிரான்சிஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
Summary
Local government employees are staging a sit-in protest at the Ramanathapuram Collectorate.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









