வெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்?
/

ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளாட்சித் துறை ஊழியர்கள் குடியேறும் போராட்டம்!

ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளாட்சித் துறை ஊழியர்களின் தொடர்பாக....

News image

உள்ளாட்சித் துறை ஊழியர்கள் குடியேறும் போராட்டம்.

Updated On :18 ஆகஸ்ட் 2025, 1:35 pm IST

ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளாட்சித் துறை ஊழியர்கள் குடியேறும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் ஐந்து அம்ச கோரிக்கை வலியுறுத்தி, குடியேறும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்தப் போராட்டத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளனர். உரிய நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Story image

அவர்கள், ஊராட்சியில் பணியாற்றும் இயக்குநர்களுக்கு ஐந்தாம் தேதிக்குள் ஊதியம் வழங்கப்பட வேண்டும், சிறப்பு படியாக ரூ. 200 வழங்க வேண்டும். அந்தந்தத் தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் ஊதியம் வழங்க வேண்டும்.

மருத்துவக் காப்பீடு அட்டை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Story image

இந்தப் போராட்டத்தில் நிர்வாகிகள் எஸ். ஏ. சந்தானம், ஆர். குருவேல், அய்யாதுரை, எஸ். பிரான்சிஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

Summary

Local government employees are staging a sit-in protest at the Ramanathapuram Collectorate.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.