மதுரையில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள பதாகைகளை 1 மணி நேரத்தில் அகற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மதுரையில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் போர்டுகள், பதாகைகளை 1 மணி நேரத்தில் அகற்றி, தகவல் தெரிவிக்க, மதுரை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் சாலையோரங்களில் உள்ள கொடிக்கம்பங்கள், விளம்பர பலகைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும், அரசியல் கட்சியினருக்கும் சென்னை உயா்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
அதைத் தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களிலும் நெடுஞ்சாலைத் துறையினர் கொடிக்கம்பங்களை அகற்றும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மதுரையில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் போர்டுகள், பதாகைகளை 1 மணி நேரத்தில் அகற்றி, தகவல் தெரிவிக்க மதுரை மாநகர காவல் ஆணையருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், மதுரையில் உள்ள அனைத்து பதாகைகள், பிளக்ஸ் போர்டுகள், கொடிக்கம்பங்களை ஆய்வு செய்ய நாங்கள் தயாராக உள்ளோம், ஒத்துழைக்க அரசு தயாரா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதையும் படிக்க: கால் லிட்டர் குடிநீர் பாட்டிலின் விலை ரூ. 125?
The Madurai bench of the Madras High Court has ordered that banners placed without permission in Madurai must be removed within 1 hour.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீதித் துறை வரலாற்றில் புதிய சாதனை: ஒரே நேரத்தில் 4 பெண் தலைமை நீதிபதிகள்

யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் கைது

சா்வதேச எல்லையில் 15. கி.மீ. சுற்றளவுக்கு சட்டவிரோத கட்டடங்களை அகற்ற வேண்டும் - அமித் ஷா உத்தரவு

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி எதிரொலி: வேலைவாய்ப்பு கோரி மதுரையில் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பேரணி
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



