சென்னை கடற்கரை - தாம்பரம் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.
கோடம்பாக்கம் முதல் பரங்கிமலை வரை தண்டவாளத்தின் குறுக்கே செல்லும் மரக்கிளைகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்போது, மரக்கிளையானது, மின்கம்பம் மீது விழுந்ததால், மின்கம்பம் வெடித்து பயங்கர சத்தம் ஏற்பட்டது.
இந்த நிலையில், சென்னை கடற்கரை - தாம்பரம் செல்லும் வழித்தடத்தில் செல்லும் புறநகர்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. இதனால், அரை மணி நேரத்துக்கு புறநகர் ரயில்கள் இயக்கப்படாது என்று ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
1 மணி நேரம் ஆகியும் ரயில்கள் இயக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், மாம்பலம், சைதாப்பேட்டை, கிண்டி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பயணிகள் காத்துக் கிடக்கின்றனர். பலர் மாற்று சேவைகளை நாடியுள்ளனர்.
திடீர் அறிவிப்பு காரணமாக, கல்லூரிகள், வேலைக்கு செல்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பயணிகள் பாதுகாப்புக் கருதியே மரக்கிளைகள் அகற்றும் நடவடிக்கையை ரயில்வே நிர்வாகம் மேற்கொள்வதாகவும், பயணிகளின் சிரமத்தை புரிந்துக்கொள்வதாகவும் ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
Summary
Passengers are suffering greatly due to the disruption of the Chennai Beach - Tambaram suburban train service.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையில் விரைவில் 2-வது ஏசி புறநகர் ரயில்! சென்ட்ரல் - அரக்கோணம் இடையே இயக்கம்?

இன்றிரவும் நாளையும் புறநகர் ரயில் சேவைகளில் மாற்றம்

சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!

ஏப்ரல் 5 முதல் சென்னை புறநகர் ரயில் சேவை சீராகும்!
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


