ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

காவலரான விநாயகர்! வேலூரில் வித்தியாசமான விநாயகர் சதுர்த்தி விழா

வேலூரில் வித்தியாசமான முறையில் விநாயகர் சதுர்த்தி விழா...

News image
காவலர் வேடத்தில் விநாயகர்- DIN
Updated On :27 ஆகஸ்ட் 2025, 10:47 am

இணையதளச் செய்திப் பிரிவு

காவலர்களுக்கு மரியாதை செலுத்தும்வகையில் காவல் நிலையம்போல் வடிவமைத்து காவலர்போல் வேடமிட்ட விநாயகர் சிலை வேலூரில் வைக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் பல விதமான சிலைகளை வைத்து மக்கள் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் வேலூர் மாநகர் தொரப்பாடி பாலாஜி நகர் பகுதியில் கொண்டாடி வரும் விநாயகர் சதுர்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வித்தியாசமான முறையில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடிவரும் பாலாஜி நகர் இளைஞர்கள் இம்முறை காவல் நிலையம் போன்று செட் அமைத்து அதில் விநாயகரே காவலர்போல் இருப்பது போன்று வடிவமைத்துள்ளனர்.

தொரப்பாடி பாலாஜி நகர் பகுதியில் தமிழ்நாடு காவல் நிலையம் போன்று தத்ரூபமாக சுற்றுச்சுவர், ஆர்ச், பெயர் பலகை உள்ளிட்டவையோடு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் முகப்பில் இரண்டு காவலர்கள் துப்பாக்கியோடு பாதுகாப்பிற்கு நிற்பது போன்று விநாயகர் வேடமிட்ட இரண்டு காவலர் சிலைகள் உள்ளன. .உள்ளே சென்று பார்த்தால் ஒரு விநாயகரே ரைட்டர் ஆக அமர்ந்துள்ளார். அவர் அங்கு வரும் மக்களிடம் புகாரை பெறுவது போன்று கையில் பேனா மற்றும் நோட்டுடன் அமர்ந்துள்ளார்.

Story image

மேலும் இந்த காவல் நிலையத்தில் ஒரு பகுதியில் சிறைச்சாலை அமைத்து அதில் சுண்டெலியை கைதியாக்கி வைத்துள்ளனர். பரிதாபமாக சிறைச்சாலையின் கம்பியை பிடித்தவாறு நின்றிருக்கிறது அந்த சுண்டெலி.

விநாயகரிடம் இருந்த லட்டை திருடியதால் இதன் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்ததாகத் தெரிவிக்கிறார்கள்.

சேலத்தில் உள்ள முத்து மலை முருகன் போன்று விநாயகர் வடிவமைக்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளது. இது ஆறுபடை வீட்டுக்கு மத்தியில் அமைந்துள்ளது போன்ற வடிவமைக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி வருகின்றனர் அப்பகுதியினர்.

summary

A statue of Lord Ganesha dressed as a policeman has been placed in Vellore

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.