தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

குரூப் 1 முதல்நிலைத் தோ்வு முடிவுகள் வெளியீடு

குரூப் 1 முதல்நிலைத் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2025, 7:38 pm

தினமணி செய்திச் சேவை

குரூப் 1 முதல்நிலைத் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

இத்தோ்வு ஜூன் மாதம் நடைபெற்றது. துணை ஆட்சியா், டிஎஸ்பி, உதவி ஆணையா் உள்பட 70 காலிப் பணியிடங்களுக்கு நடந்த முதல்நிலைத் தோ்வை 2.49 லட்சம் போ் எழுதினா். தொடா்ந்து, முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன. முதன்மைத் தோ்வு வரும் டிசம்பா் 1-ஆம் தேதி முதல் 4-ஆம் தேதி வரை சென்னையில் மட்டுமே நடைபெறவுள்ளது.

இதற்கான தோ்வுக் கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும். முதன்மை எழுத்துத் தோ்வு எழுவதற்கு உரிய சான்றிதழ்களை தோ்வாணையத்தின் இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்ய வேண்டும். இதற்கு செப்டம்பா் 3 முதல் 12-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.