கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

தமிழகத்தில் 9 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகத்தில் 9 காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

News image

தமிழக காவல்துறை

Updated On :29 ஆகஸ்ட் 2025, 3:58 pm IST

பல்வேறு நிர்வாகக் காரணங்களுக்காக, தமிழகத்தில் ஒன்பது காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இன்று தமிழ்நாட்டில் பணியில் உள்ள ஒன்பது ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் கூடுதல் முதன்மைச் செயலர் தீரஜ் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அந்த உத்தரவில், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியாக இருந்த லட்சுமி ஊழல் தடுப்புப் பிரிவு ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியாக அனிஷா உசேன் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை கிழக்கு இணை ஆணையராக இருந்த விஜயகுமார் ஐபிஎஸ்,தெற்கு போக்குவரத்து காவல்துறை இணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை கிழக்கு இணை ஆணையராக பாண்டி கங்காதர் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை மாநகர போக்குவரத்துப் பிரிவு வடக்கு இணை ஆணையராக சோனல் சந்திரா நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை குற்றப்பிரிவு சிஐடி காவல் கண்காணிப்பாளராக இருந்த ஜவகர், சென்னை குற்றப்பிரிவு சிஐடியில் புதிதாக உருவாக்கப்பட்ட மெட்ரோ மண்டல காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கோவை காவல் தலைமையக துணை ஆணையராக இருந்த சுகாசினி ஐபிஎஸ் சென்னை மேற்கு மண்டல போக்குவரத்து இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறை கண்காணிப்பாளராக பதவி உயர் பெற்று, சென்னை குற்றப்பிரிவு சிஐடி காவல் கண்காணிப்பாளராக பி.எச். ஷாஜிதா நியமிக்கப்பட்டுள்ளார்.

கோவை காவல் தலைமையக துணை ஆணையராக திவ்யா நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

9 police officers have been transferred and ordered to be transferred in Tamil Nadu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.