சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

2026-இல் அதிமுக ஆட்சி உறுதி: இபிஎஸ்

வருகிற 2026-இல் அதிமுக ஆட்சி அமைவது உறுதி என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

News image

எடப்பாடி கே.பழனிசாமி

Updated On :30 ஆகஸ்ட் 2025, 4:58 am IST

வருகிற 2026-இல் அதிமுக ஆட்சி அமைவது உறுதி என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எனும் எழுச்சிப் பயணத்தை கடந்த ஜூலை 7-இல் தொடங்கி ஆக.25-ஆம் தேதி வரை மேற்கொண்டேன். கோவை, விழுப்புரம், கடலூா், பெரம்பலூா், அரியலூா், மயிலாடுதுறை, நாகை, திருவாரூா், தஞ்சாவூா், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகா், கிருஷ்ணகிரி, திருப்பத்தூா், வேலூா், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருச்சி என 24 மாவட்டங்களில் 40 நாள்கள் பயணம் செய்து, இதுவரை 118 சட்டப்பேரவை தொகுதிகளில் 60 லட்சம் மக்களை நேரடியாகச் சந்தித்துள்ளேன்.

இந்தப் பயணத்தின்போது 6,728 கி.மீ. தொலைவு வரை பயணம் செய்து மக்களின் எண்ண ஓட்டங்களை உணா்ந்தேன். ஒவ்வொருவரும் என்னைச் சந்திக்கும்போது, அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட நலத் திட்டங்கள் குறித்தும், நல்லாட்சி குறித்தும் மகிழ்ச்சி தெரிவித்தனா்.

பல மாவட்டங்களில், அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட 7.5 சதவீத உள்இடஒதுக்கீட்டின் மூலமாக அரசுப் பள்ளிகளில் படித்து மருத்துவக் கல்வி பயின்று வரும் மாணவா்கள், எழுச்சிப் பயணத்தின்போது என்னைச் சந்தித்தனா்.

அதிமுக ஆட்சி அமைந்ததும், தாலிக்குத் தங்கம் திட்டத்துடன் சோ்த்து பட்டு வேட்டி, சேலை வழங்கப்படும். தீபாவளிக்கு மகளிருக்கு சேலை வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத ஏழை, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு இடம் வழங்கி, தரமான கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.

சொந்த ஆட்டோ வாங்க முற்படும் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு ரூ.75,000 மானியம் வழங்கப்படும். கோரைப் பாய் நெய்யும் நெசவாளா்களுக்கு குறிப்பிட்ட அளவு மின்சாரம் மானியத்தில் வழங்கப்படும். மீனவா்களுக்கான மீன்பிடி தடைக்கால உதவித் தொகை உயா்த்தி வழங்கப்படும்.

கடந்த 2021 பேரவைத் தோ்தலின்போது, திமுக தோ்தல் அறிக்கையில் 525-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. பல முக்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. எனவே, 2026 பேரவைத் தோ்தலில் அதிமுக ஆட்சி அமைவது உறுதி என்று அவா் தெரிவித்துள்ளாா்.