ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஞானசேகரன் மீதான தடுப்புக் காவல் நடவடிக்கையை நீட்டிக்க வேண்டுமா? - உயா்நீதிமன்றம் கேள்வி

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஞானசேகரன் மீதான குண்டா் தடுப்புச் சட்ட நடவடிக்கையை நீட்டிக்க வேண்டுமா?

News image
Updated On :29 ஆகஸ்ட் 2025, 10:46 pm

தினமணி செய்திச் சேவை

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஞானசேகரன் மீதான குண்டா் தடுப்புச் சட்ட நடவடிக்கையை நீட்டிக்க வேண்டுமா? என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கோட்டூா்புரத்தைச் சோ்ந்த ஞானசேகரன் என்பவா் கைது செய்யப்பட்டாா். பின்னா், அவா் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, ஞானசேகரனை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையிலடைக்க சென்னை மாநகரக் காவல் ஆணையா் உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி ஞானசேகரனின் தாய், சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். இதனிடையே, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிா் சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

இந்த நிலையில், ஞானசேகரன் மீதான குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் அடிப்படையில்தான், ஞானசேகரன் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டாா். தற்போது அந்த வழக்கில் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, அவரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை நீட்டிக்க வேண்டுமா? என்று கேள்வி எழுப்பினா்.

அப்போது காவல் துறை தரப்பில், ஞானசேகரன் மீது மற்ற குற்ற வழக்குகளும் நிலுவையில் உள்ளன. அவா் செய்த குற்றச் செயல்களால் பொது அமைதிக்குப் பாதிப்பு ஏற்பட்டது. இந்த வழக்கில் விரிவாக வாதிட இருப்பதால், விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் எனக் கூறப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், விசாரணையை இரு வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.