பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

இல.கணேசன் குடும்பத்திற்கு எடப்பாடி பழனிசாமி ஆறுதல்

நாகாலாந்தின் மறைந்த ஆளுநர் இல.கணேசன் இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத்திற்கு அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் தெரிவித்தார்.

News image
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி - ENS
Updated On :31 ஆகஸ்ட் 2025, 5:47 am

இணையதளச் செய்திப் பிரிவு

நாகாலாந்தின் மறைந்த ஆளுநர் இல.கணேசன் இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத்திற்கு அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் தெரிவித்தார்.

அப்போது சென்னை தியாகராய நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள இல.கணேசன் படத்திற்கு அவர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். நாகாலாந்து ஆளுநராக இருந்த இல.கணேசன் உடல் நலக்குறைவால் கடந்த ஆக.15-ஆம் தேதி காலமானார்.

அந்த சமயத்தில் 'மக்களைக் காப்போம் - தமிழகத்தை மீட்போம்' என்ற பிரசார சுற்றுப்பயணத்தில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டு இருந்தார். அதனால் இல.கணேசனின் மறைவுக்கு அவரால் வரமுடியவில்லை.

இந்த நிலையில்தான் இல.கணேசன் குடும்பத்தினரைச் சந்தித்து எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

summary

AIADMK General Secretary Edappadi Palaniswami visited the residence of the late Governor of Nagaland, La. Ganesan and offered condolences to his family.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.