மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

1,300 ஆண்டுகள் பழமையான ஆதிகும்பேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா: திரளானோர் பங்கேற்பு

1,300 ஆண்டுகள் பழமையான ஆதிகும்பேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

News image
ஆதிகும்பேஸ்வரர் கோயில்
Updated On :1 டிசம்பர் 2025, 4:00 am

தினமணி செய்திச் சேவை

1,300 ஆண்டுகள் பழமையான ஆதிகும்பேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் மாநகரில் பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகப்பெருவிழா உலக பிரசித்தி பெற்றது.

அந்த மகாமகப் பெருவிழா தொடர்புடைய 12 சைவ திருத்தலங்களில் முதன்மையான தலமாக விளங்குவதும் 1,300 ஆண்டுகள் பழமையானது தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் சோழநாடு காவிரி தென்கரை தளங்களில் அமைத்துள்ள 26ஆவது சிவத்தலமாகும் கல் நாதஸ்வரம் உள்ள பெருமையை பெற்றுள்ள மங்களாம்பிகா சமேத ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில் ஆகும்.

இக்கோயிலில் கடந்த 2009 ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பக்தர்களின் கோரிக்கையை ஏற்று 15 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2024 ஆண்டு பாலாலயம் செய்யப்பட்டு பல்வேறு கட்டங்களாக கோயில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் நிறைவு பெற்றன‌.

அதனைத்தொடர்ந்து 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 99 குண்டங்கள் கூடிய யாகசாலைகள் அமைக்கப்பட்டு, கடந்த 28 ஆம் ஆண்டு விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது.

இன்று காலை எட்டாம் கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று கடம் புறப்பாடு நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழுங்க கோபுர கலசங்களுக்கு மகா குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனர்.

summary

The consecration ceremony of the 1,300-year-old AdiKumbeswarar Temple was held with great fanfare.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.