மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சென்னை மெரினாவுக்கு செல்லத் தடை நீடிப்பு

சென்னையில் காற்றுடன் மழை பெய்து வருவதால் மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு விதிக்கப்பட்ட தடை இன்றும் தொடர்கிறது.

News image
கோப்புப்படம். - Center-Center-Chennai
Updated On :1 டிசம்பர் 2025, 3:36 am

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னையில் காற்றுடன் மழை பெய்து வருவதால் மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு விதிக்கப்பட்ட தடை இன்றும் தொடர்கிறது.

வங்கக் கடலில் நிலவிய டிட்வா புயல், காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தொடா்ந்து இந்த புயல் சின்னம் இன்று வடதமிழகம் - புதுச்சேரி கடலோர பகுதிகளுக்கு இணையாக வடதிசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்க வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக, டிச.1-ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், திருவள்ளூா் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் திங்கள்கிழமை (டிச.1) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதலே காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு விதிக்கப்பட்ட தடை திங்கள்கிழமையும் நீட்டிக்கப்பட்டுளளது. முன்னதாக டிட்வா புயல் காரணமாக நேற்று காலை முதல் மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது.

பொதுமக்கள் கடற்கரைக்கு செல்லாத வகையில் போலீஸார் தடுப்புகளை அமைத்து கண்காணித்து வருகின்றனர். இதனிடையே சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால் காலையில் பள்ளி செல்லும் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

summary

The ban on the public from visiting Marina Beach continues today due to windy and rainy weather in Chennai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.