சென்னையில் தொடரும் மழை! சாலைகளை சூழும் வெள்ளம்!!

சென்னையில் தொடர்ந்து மழை பெய்வதால் தாழ்வான பகுதிகளில் சாலைகளை வெள்ளம் சூழும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை சாலைகள்
சென்னை சாலைகள்
Updated on
1 min read

சென்னையில் பரவலாக இன்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், சாலைகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

பெரம்பூர் முரசொலி மாறன் சுரங்கப் பாதையில் மழை நீர் தேங்கியிருப்பதால் அப்பகுதியில் போக்குவரத்து கடும் சிரமத்துக்கு உள்ளாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.

திருமுல்லைவாயல் - திருப்பதி நெடுஞ்சாலையில் மழை நீர் தேங்கியிருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல், அம்பத்தூர், ஆவடி, வடபழனி, விருகம்பாக்கம் பகுதிகளிலும் சாலைகளில் மழை நீர் தேங்கி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காலை முதல் மழை பெய்து வந்தாலும், பெரும்பாலும் வடிகால் வழியாக வழிந்தோடி வருகிறது. ஆனால் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாழ்வான இடங்களிலும் முக்கிய சாலைகளில் மழை நீர் தேங்கியிருக்கிறது.

ஐயப்பன்தாங்கல் பகுதிகளில் வடிகால் வசதி இல்லாததால், மழை நீர் தேங்குவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியிருக்கிறார்கள்.

சென்னை முகலிவாக்கம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மழை என்றும் பாராமல் போக்குவரத்துக் காவலர்கள் போக்குவரத்தை சரி செய்து வருகிறார்கள்.

சாலையோரங்களில் மழை நீர் தேங்கிவருவதால் பல முக்கிய இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகளும் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

Summary

Continuous rains in Chennai have caused flooding of roads in low-lying areas.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com