யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சென்னையில் தொடரும் மழை! சாலைகளை சூழும் வெள்ளம்!!

சென்னையில் தொடர்ந்து மழை பெய்வதால் தாழ்வான பகுதிகளில் சாலைகளை வெள்ளம் சூழும் நிலை ஏற்பட்டுள்ளது.

News image
சென்னை சாலைகள்
Updated On :1 டிசம்பர் 2025, 7:50 am

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னையில் பரவலாக இன்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், சாலைகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

பெரம்பூர் முரசொலி மாறன் சுரங்கப் பாதையில் மழை நீர் தேங்கியிருப்பதால் அப்பகுதியில் போக்குவரத்து கடும் சிரமத்துக்கு உள்ளாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.

திருமுல்லைவாயல் - திருப்பதி நெடுஞ்சாலையில் மழை நீர் தேங்கியிருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல், அம்பத்தூர், ஆவடி, வடபழனி, விருகம்பாக்கம் பகுதிகளிலும் சாலைகளில் மழை நீர் தேங்கி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காலை முதல் மழை பெய்து வந்தாலும், பெரும்பாலும் வடிகால் வழியாக வழிந்தோடி வருகிறது. ஆனால் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாழ்வான இடங்களிலும் முக்கிய சாலைகளில் மழை நீர் தேங்கியிருக்கிறது.

தொடர்ச்சியாக தற்போது சென்னையில் குறிப்பாக மக்கள் தொகை அதிகம் கொண்ட பகுதிகளான வேளச்சேரி, துரைப்பாக்கம், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி, அரும்பாக்கம், கோயம்பேடு பிரதான சாலையான அரும்பாக்கம் சாலையில் முழங்காலுக்கு மேலாக கடல் போல் மழைநீர் தேங்கி நிற்பதாகக் கூறப்படுகிறது.

ஐயப்பன்தாங்கல் பகுதிகளில் வடிகால் வசதி இல்லாததால், மழை நீர் தேங்குவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியிருக்கிறார்கள்.

சென்னை முகலிவாக்கம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மழை என்றும் பாராமல் போக்குவரத்துக் காவலர்கள் போக்குவரத்தை சரி செய்து வருகிறார்கள்.

சாலையோரங்களில் மழை நீர் தேங்கிவருவதால் பல முக்கிய இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகளும் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

summary

Continuous rains in Chennai have caused flooding of roads in low-lying areas.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.