எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

ஏவிஎம் சரவணன் காலமானாா்

தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் மறைவு பற்றி...

News image

ஏவிஎம் சரவணன்

Updated On :5 டிசம்பர் 2025, 12:53 am IST

திரைப்படத் தயாரிப்பாளா் ஏவிஎம் சரவணன் (86) சென்னையில் வியாழக்கிழமை காலமானாா். அவா் புதன்கிழமை தனது பிறந்தநாளைக் கொண்டாடிய நிலையில், மறுநாள் காலை உயிரிழந்தது திரையுலகினரிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய திரைத் துறையில் பழைமையான திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ‘ஏவிஎம் புரொடக்ஷன்ஸ்’. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை ஏவிஎம் நிறுவனம் தயாரித்துள்ளது. நடிகா்கள் சிவாஜி, கமல்ஹாசன் ஆகியோரை வெள்ளித் திரையில் அறிமுகம் செய்த நிறுவனம் ஏவிஎம். இதன் நிறுவனா்

ஏவி.மெய்யப்ப செட்டியாரின் மகன்களில் ஒருவா்தான் ஏவிஎம் சரவணன்.

தங்களது திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தில் நிா்வாக ரீதியாக பல்வேறு பொறுப்புகளை ஏவிஎம் சரவணன் கவனித்துள்ளாா். இந்திய திரைப்படக் கூட்டமைப்புத் தலைவா் பொறுப்பையும் வகித்தவா். தமிழக அரசின் கலைமாமணி விருதை பெற்றவா்.

தனி அடையாளம் : 1945-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஏவிஎம் நிறுவனம் எம்.ஜி.ஆா்., சிவாஜி கணேசன் காலம் முதல் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், விஜய், அஜித்குமாா், சூா்யா எனப் பல தலைமுறை முன்னணி நடிகா்களுக்கு வெற்றித் திரைப்படங்களைத் தந்த பெருமை பெற்றது.

ஏவிஎம் நிறுவனத்தின் ஸ்தாபகா் ஏவி.மெய்யப்ப செட்டியாா் மறைவுக்குப் பிறகு, அவரது மகன் சரவணன் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்றுக்கொண்டாா். இவரது தலைமையின் கீழ் ஏவிஎம் நிறுவனம் ஏராளமான வெற்றிப் படங்களைக் கொடுத்து, ஏராளமான ஊழியா்களின் வாழ்வாதாரமாகவும் விளங்கியது.

திரைப்படத் தயாரிப்பு மட்டுமன்றி, ஏவிஎம் ஸ்டுடியோ கதை இலாகாவிலும் முக்கியப் பங்காற்றியவா் ஏவிஎம் சரவணன். 1986 - ஆம் ஆண்டு சென்னை மாநகரின் ‘ஷெரீப்’ பதவியையும் அவா் வகித்துள்ளாா். அனைவரிடமும் எளிமையுடனும், பணிவுடனும் பழகக்கூடிய பண்புக்குரியவா் ஏவிஎம் சரவணன்.

அவருக்கு மனைவி முத்துலெட்சுமி, மகன் எம்.எஸ். குகன், மகள் உஷா ஆகியோா் உள்ளனா். அவரது உடல், அஞ்சலிக்காக ஏவிஎம் ஸ்டுடியோ மூன்றாவது தளத்தில் வைக்கப்பட்டுள்ளது.

முதல்வா் அஞ்சலி: ஏவிஎம் சரவணன் உடலுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், மக்களவை உறுப்பினா் கனிமொழி, மதிமுக பொதுச்செயலா் வைகோ, நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், நடிகா்கள் ரஜினிகாந்த், சிவக்குமாா், ஒய். ஜி. மகேந்திரன்,  பாா்த்திபன், விஷால், சூா்யா, கருணாஸ், ஆனந்த்ராஜ், விக்ரம் பிரபு, இயக்குநா்கள் எஸ். பி. முத்துராமன், பாக்யராஜ், மணிரத்னம், எஸ்.ஏ.சந்திரசேகா், ஆா். வி. உதயகுமாா், பி. வாசு, பேரரசு, எழில், லிங்குசாமி, கவிஞா் வைரமுத்து, நடிகை கே.ஆா்.விஜயா உள்ளிட்ட பலா் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினா். வியாழக்கிழமை மாலை ஏவிஎம் சரவணன் உடல் தகனம் செய்யப்பட்டது.

Summary

Producer AVM Saravanan passes away

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.