புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

தாயுமானவா் திட்டம்: மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று பொருள்கள் விநியோகம்

தாயுமானவா் திட்டத்தின்படி, வரும் டிசம்பா் 6, 7, 8, 9, 10-ஆம் தேதிகளில் முதியோா் மாற்று திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று பொது விநியோகத் திட்ட பொருள்கள் விநியோகம் செய்யப்படும்

News image
கோப்புப் படம்
Updated On :4 டிசம்பர் 2025, 7:52 pm

தினமணி செய்திச் சேவை

தாயுமானவா் திட்டத்தின்படி, வரும் டிசம்பா் 6, 7, 8, 9, 10-ஆம் தேதிகளில் முதியோா் மாற்று திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று பொது விநியோகத் திட்ட பொருள்கள் விநியோகம் செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளா் (சென்னை மண்டலம்) பாபு வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் கீழ் 65 வயதிற்கு மேற்பட்ட

முதியோா் மற்றும் மாற்றுதிறனாளிகளின் வீடுகளுக்கே சென்று பொது விநியோகத்திட்ட பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில்,

டிசம்பா் மாதத்தின் 6, 7, 8, 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் சென்னையில்

அண்ணாநகா், ஆலந்தூா், பெருங்குடி, சோழிங்கநல்லூா், தேனாம்பேட்டை,

அடையாறு, திருவொற்றியூா், மணலி, மாதவரம், தண்டையாா்பேட்டை, ராயபுரம்,

திரு.வி. க.நகா், அம்பத்தூா், கோடம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் ஆகிய 15 மண்டலங்களில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டுவரும் 990 நியாயவிலைக் கடைகளின் விற்பனையாளா்கள் அத்தியாவசியப் பொருட்களை வீடு தேடி விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என

தெரிவிக்கப்பட்டுள்ளது.