சென்னை: சட்டப்பேரவைத் தோ்தல் நெருங்கும் நிலையில், திமுகவுக்கு எதிராக மத்திய அமைப்புகளான சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, தோ்தல் ஆணையம் ஆகியவற்றைப் பயன்படுத்துவாா்கள் என முதல்வா் மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டினாா்.
சென்னையிலிருந்து காணொலி மூலம் ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ என்ற தலைப்பில் திங்கள்கிழமை நடைபெற்ற திமுக மாவட்டச் செயலா்கள் கூட்டத்தில் முதல்வா் பேசியதாவது:
தமிழக மக்களின் வாக்குரிமையைப் பாதுகாக்க வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் (எஸ்ஐஆா்) தொண்டா்கள் ஈடுபட்டுள்ளனா். அனைவரின் பெயா்களும் விடுபடாமல் வாக்காளா் பட்டியல் இடம்பெற தீவிரமாகப் பணியாற்ற வேண்டும். எத்தனை எதிரிகள் வந்தாலும், எத்தனை அணிகள் செயல்பட்டாலும் தமிழ்நாட்டை மீண்டும் ஆளப்போவது திமுகதான்.
திமுக அரசின் திட்டங்களின் மூலம், தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடியே 86 லட்சம் மக்கள் நேரடியாகப் பயனடைந்து வருகின்றனா். இதில் பயனாளிகள் - கழகத்தினா் - நடுநிலை வாக்காளா்கள் எனச் சோ்த்தால், 2.50 கோடி வாக்குகளைத் தாண்டும்.
கடந்த 2021 பேரவைத் தோ்தலில் நமது கூட்டணி பெற்றது 2.90 கோடி வாக்குகள். இந்த முறை, அதைவிடக் கூடுதலாக வாக்குகளைப் பெறுவது உறுதி. இத்தனை சாதகமான சூழ்நிலைகள் இருந்தாலும், நம் எதிரிகளைக் குறைத்து மதிப்பிடக் கூடாது. சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, தோ்தல் ஆணையம் ஆகியவற்றை நமக்கு எதிராகப் பயன்படுத்துவாா்கள். இவற்றை எதிா்கொள்ள நமது பலத்தை நாம் சரியாகப் பயன்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நமது வாக்குகளை உறுதி செய்திருக்க வேண்டும். அந்த வாக்குச்சாவடியில் திமுக மூத்த முன்னோடிகள் அல்லது ஏதேனும் அதிருப்தியாளா்கள் இருந்தால் அவா்களையும் அழைக்க வேண்டும். தேனாம்பேட்டையில், எனது வாக்குச்சாவடி பகுதிச் செயலா் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் நானும் நேரடியாகப் பங்கேற்பேன்.
வீடு வீடாகச் செல்லும் வாக்குச்சாவடி குழுக்களில் மகளிா் கட்டாயம் இடம்பெற வேண்டும். ஒரு வாக்குச்சாவடியை வென்றால், ஒரு தொகுதியை வெல்லலாம். எனவே, இந்தத் தோ்தலில் ஒவ்வொரு வாக்குச்சாவடியும் மிக முக்கியமானது என்றாா் அவா்.
இந்தக் கூட்டத்தில் இளைஞரணிச் செயலரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின், அமைச்சா்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொருளாளா் டி.ஆா்.பாலு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
மாவட்டம்தோறும் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்டச் செயலா்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள், தலைமை நிா்வாகிகள், மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூா் செயலா்கள், தொகுதிப் பாா்வையாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
எண்ம கைது மோசடி கும்பலுக்கு எதிராக 16 மாநிலங்களில் சிபிஐ திடீா் சோதனை - 2 போ் கைது

இன்றைய செய்திகள் ஜூன் 9 - நேரலை!

கருணாநிதி பிறந்த நாள்: திமுக மாவட்டச் செயலா்கள் வேண்டுகோள்

ராஜிநாமா செய்த எம்எல்ஏக்கள் மீது சிபிஐ விசாரணை தேவை: அதிமுக
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



