ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

விடியற்காலையில் நிலவும் கடும் பனி மூட்டம்! வேலூரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

விடியற்காலையில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக வேலூரில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

News image
கடும் பனி மூட்டம்
Updated On :8 டிசம்பர் 2025, 4:38 am

இணையதளச் செய்திப் பிரிவு

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் விடியற்காலையில் நிலவும் கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் மற்றும் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள்.

சாலைகளில் வாகனங்கள் அனைத்தும் முகப்பு விளக்குகளை எரிய விட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கேவி குப்பம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இன்று விடியற்காலை முதல் கடும் பனி பொழிவு நிலவியது.

இதனால், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் வேன்கள் இருசக்கர வாகனங்களில் வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் லோடு வாகனங்கள் முகப்பு விளக்கு எரியவிட்டு வாகனத்தை இயக்கிச் செல்கின்றனர்.

மேலும் கிராமப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் விவசாய பணியை மேற்கொள்ள முடியாமல் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.