வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

வரைவு வாக்காளர் பட்டியலுக்குப் பிறகு திமுகவினர் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்: மு.க. ஸ்டாலின்

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு...

News image

முதல்வர் ஸ்டாலின்

Updated On :8 டிசம்பர் 2025, 12:18 pm IST

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான பிறகு திமுகதொண்டர்கள் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

'என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி' என்ற தலைப்பில் நடைபெறும் இந்த கூட்டத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

டிச. 11 ஆம் தேதி எஸ்ஐஆர் பணிகள் முடிவடைந்ததாலும் அதன்பின்னர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான பிறகு திமுக தொண்டர்கள் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும். தகுதியானவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுவிடக் கூடாது என்பதை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். பெயர் விடுபட்டிருந்தால் அவர்களின் பெயர்களைச் சேர்க்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று திமுக தொண்டர்களுக்கு முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள், ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள வெற்றி வாய்ப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

Summary

MK Stalin speech at the DMK district secretaries meeting

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.