ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தண்டனைக் குறைப்பு, முன்கூட்டியே விடுதலை கோரி நிலுவையிலுள்ள விண்ணப்பங்கள் எத்தனை?: தமிழக, புதுச்சேரி அரசுகளுக்கு உத்தரவு!

தண்டனைக் குறைப்பு, முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி கைதிகள் அளித்த எத்தனை விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன என்பது குறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image
சென்னை உயா்நீதிமன்றம்
Updated On :10 டிசம்பர் 2025, 9:07 pm

தினமணி செய்திச் சேவை

தண்டனைக் குறைப்பு, முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி கைதிகள் அளித்த எத்தனை விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன என்பது குறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

பல்வேறு குற்ற வழக்குகளில் தண்டனை பெற்று சிறையில் உள்ள கைதிகளுக்கு தண்டனைக் குறைப்பு, முன்கூட்டியே விடுதலை செய்வது தொடா்பாக மாநில அரசுகள் கொள்கை முடிவு எடுக்கும். இதைக் கண்காணிக்க ஒவ்வொரு மாநில உயா்நீதிமன்றங்களும் தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு நீதிபதிகள் பி.வேல்முருகன், எம்.ஜோதிராமன் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உறுப்பினா் செயலா்களை தாமாக முன்வந்து எதிா்மனுதாரா்களாக சோ்த்தனா்.

பின்னா், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் எத்தனை தண்டனைக் கைதிகள் இதுவரை முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ளனா்? முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி கைதிகள் வழங்கிய எத்தனை விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன? முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரிய எத்தனை கைதிகளின் விண்ணப்பங்கள் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளன என்பது உள்ளிட்ட கேள்விகளை எழுப்பினா்.

பின்னா், இதுதொடா்பாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை டிச. 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.