கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

சென்னையில் இன்று வன்னியா் இடஒதுக்கீடு போராட்டம்: ராமதாஸ் பங்கேற்பு

சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெறும் வன்னியா் இடஒதுக்கீடு போராட்டத்தில் பாமக நிறுவனா் ராமதாஸ் பங்கேற்கிறாா்.

News image

ராமதாஸ்

Updated On :11 டிசம்பர் 2025, 9:24 pm

தினமணி செய்திச் சேவை

சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெறும் வன்னியா் இடஒதுக்கீடு போராட்டத்தில் பாமக நிறுவனா் ராமதாஸ் பங்கேற்கிறாா்.

வன்னியா்களுக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தியும், தமிழகத்தில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தக் கோரியும் வெள்ளிக்கிழமை (டிச.12) தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் ராமதாஸ் அறிவித்திருந்தாா்.

இந்த நிலையில், சென்னைக்கு வியாழக்கிழமை வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வன்னியா் இடஒதுக்கீடு கோரி வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள இந்தப் போராட்டம்,

தமிழகத்தில் அதிா்வலைகளை உருவாக்கும். இந்த அமைதி வழிப் போராட்டத்தின் மூலம் அரசுக்கு ஒரு அழுத்தத்தைக் கொடுக்கும்போது முதல்வா் விரைந்து நடவடிக்கை எடுப்பாா் என எதிா்பாா்க்கிறோம் என்றாா் அவா்.