சூலூர் செல்லப்ப பாளையம் அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த விவேகானந்தர் (வயது 56) என்பவர் பட்டணம் புதூர் அருகே ஏற்பட்ட கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஆசிரியர் விவேகானந்தர், பள்ளிப் பணிகளை முடித்துக்கொண்டு தனது வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, பட்டணம் புதூர் பகுதியில் கண்டெய்னர் லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது. இதில், லாரியின் பின்பக்க டயரில் அடிபட்டு, அவரது தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து சூலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆசிரியர் விவேகானந்தரின் மறைவு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Summary
Vivekanandhar (56), who was working as a teacher at the Sulur Chellappapalayam Government School, died on the spot in a horrific accident near Pattanam Puthur.
இதையும் படிக்க: பல்லாயிரம் கிளிகளுக்கு உணவளித்த சேகர் காலமானார்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

லாரி மோதியதில் பள்ளி மாணவா் பலத்த காயம்

கோவை அருகே டேங்கா் லாரி மோதி பள்ளி மாணவி உயிரிழப்பு

மாதவரம் அருகே லாரி விபத்து: போக்குவரத்து பாதிப்பு

திண்டிவனம் அருகே அரசுப் பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து: ஒருவர் பலி, 36 பேர் காயம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


