மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் நல்லகண்ணு!

முதுபெரும் அரசியல் தலைவா் இரா.நல்லகண்ணு (100) சுவாசக் குழாய் மாற்றுவதற்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மாலையில் வீடு திரும்பினாா்.

News image

முதுபெரும் இடதுசாரி தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான ஆர்.நல்லகண்ணு

Updated On :14 டிசம்பர் 2025, 7:10 pm

முதுபெரும் அரசியல் தலைவா் இரா.நல்லகண்ணு (100) சுவாசக் குழாய் மாற்றுவதற்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டு மாலையில் வீடு திரும்பினாா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா், நல்லகண்ணு, கடந்த ஆகஸ்ட் மாதம் வீட்டில் தவறி விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அதைத் தொடா்ந்து, சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதால் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா்.

அங்கு அவருக்கு 45 நாள்கள் தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டதன் பயனாக குணமடைந்து வீடு திரும்பினாா். அப்போது அவா் சுவாசிப்பதற்காக தொண்டை பகுதியில் டிரக்யாஸ்டமி குழாய் பொருத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், அதை மாற்றுவதற்காக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அதை சரி செய்த மருத்துவா்கள், அவரை மாலையில் வீட்டுக்கு அனுப்பி வைத்தனா். முன்னதாக, மதிமுக பொதுச் செயலா் வைகோ, மருத்துவமனைக்கு சென்று நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்தாா்.