கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

சென்னை, கடலோர மாவட்டங்களில் நாளை முதல் மழை! குடை கவனம்!

சென்னை, கடலோர மாவட்டங்களில் நாளை முதல் மழை பெய்யவுள்ளது தொடர்பாக...

News image
மழை (கோப்புப்படம்)
Updated On :15 டிசம்பர் 2025, 1:08 pm

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நாளை(டிச. 16) முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

வானிலை நிலவரங்களை அவ்வபோது சமூக ஊடகங்களில் வெளியிடும் தமிழ்நாடு வெதர்மேன் என்று அறியப்படும் பிரதீப் ஜான், மழை தொடர்பாக தெரிவித்திருப்பதாவது:

”அடுத்த இரண்டு நாள்களில் (டிச. 16, 17 ஆகிய தேதிகளில்) தமிழகத்தின் சில பகுதிகளில் மேகமூட்டம் மற்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளதால், குறைந்தபட்ச வெப்பநிலையே நிலவும்.

டிசம்பர் 19 ஆம் தேதி முதல் 21 வரை கவனமாக இருங்கள். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு குளிரான நாள்களாகக் கணிக்கப்பட்டுள்ளன. அப்படியென்றால், மற்ற உள் மாவட்டங்களில் அதிகபட்ச குளிர் நிலவும்.

அதற்கு முன்னதாக, டிசம்பர் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் மற்றும் கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

எனவே, அடுத்த இரண்டு நாள்களுக்கு உங்களுடைய குடையை எடுத்துச் செல்லுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

summary

Rain is expected in Chennai and coastal districts from tomorrow.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.