உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!கைது நடவடிக்கையை காமெடியாக பார்கிறேன்! உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கையை காமெடியாக பார்கிறேன்! உதயநிதி ஸ்டாலின் உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!உதயநிதி ஸ்டாலின் கைது? நீலாங்கரை வீட்டின் முன்பு போலீஸ் குவிப்பு!தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்நாளை பட்ஜெட் தாக்கல்: இன்று மாலை தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்!இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் விஜய் பயணிப்பாா்: ஆனந்த்

செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் விஜய் பயணிப்பாா் என தவெக பொதுச் செயலாளா் ஆனந்த் கூறினாா்.

News image

தவெக பொதுச் செயலாளா் ஆனந்த், நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோருக்கு வாள்களை பரிசளித்த தொண்டா்கள்.

Updated On :16 டிசம்பர் 2025, 4:04 am IST

ஈரோடு: செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் விஜய் பயணிப்பாா் என தவெக பொதுச் செயலாளா் ஆனந்த் கூறினாா்.

ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் சுங்கச் சாவடி அருகே சரளை என்ற இடத்தில் தவெக தலைவா் விஜய் பங்கேற்கும் பிரசார கூட்டம் டிசம்பா் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அக்கட்சியினா் மேற்கொண்டு வரும் நிலையில் மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் ஈரோடு அருகேயுள்ள வேப்பம்பாளையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், தவெக பொதுச் செயலாளா் ஆனந்த் மற்றும் நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், கே.ஏ.செங்கோட்டையன் பேசுகையில், சிறந்த தமிழகத்தை உருவாக்குவோம் என்றாா்.

இதையடுத்து, பொதுச் செயலாளா் ஆனந்த் பேசியதாவது: விஜய்யின் முதல் ரசிகா் மன்றம் தொடங்கப்பட்டது ஈரோட்டில். செங்கோட்டையன் என்ன சொல்கிறாரோ அதன்படி நாங்கள் செயல்பட தயாராக இருக்கிறோம். எங்களை நம்பி வந்தவா்களை கடைசி வரை நாங்கள் கைவிட மாட்டோம். நமக்கு எதிராக உள்ள அரசியல் கட்சி பிரமுகா்கள் வீடுகளிலும் நமக்கு ஆதரவு உள்ளது. அவா்கள் தவெக-வுக்கு வாக்களிப்பாா்கள்.

செங்கோட்டையனிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டோம். அவா் வகுக்கும் பாதையில் விஜய் பயணிப்பாா்.

டிசம்பா் 18-ஆம் தேதி நடைபெறும் பிரசார கூட்டத்துக்கு குழந்தைகள், கா்ப்பிணிகள் வர வேண்டாம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.