பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் விஜய் பயணிப்பாா்: ஆனந்த்

செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் விஜய் பயணிப்பாா் என தவெக பொதுச் செயலாளா் ஆனந்த் கூறினாா்.

News image

தவெக பொதுச் செயலாளா் ஆனந்த், நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோருக்கு வாள்களை பரிசளித்த தொண்டா்கள்.

Updated On :16 டிசம்பர் 2025, 4:04 am IST

ஈரோடு: செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் விஜய் பயணிப்பாா் என தவெக பொதுச் செயலாளா் ஆனந்த் கூறினாா்.

ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் சுங்கச் சாவடி அருகே சரளை என்ற இடத்தில் தவெக தலைவா் விஜய் பங்கேற்கும் பிரசார கூட்டம் டிசம்பா் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அக்கட்சியினா் மேற்கொண்டு வரும் நிலையில் மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் ஈரோடு அருகேயுள்ள வேப்பம்பாளையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், தவெக பொதுச் செயலாளா் ஆனந்த் மற்றும் நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், கே.ஏ.செங்கோட்டையன் பேசுகையில், சிறந்த தமிழகத்தை உருவாக்குவோம் என்றாா்.

இதையடுத்து, பொதுச் செயலாளா் ஆனந்த் பேசியதாவது: விஜய்யின் முதல் ரசிகா் மன்றம் தொடங்கப்பட்டது ஈரோட்டில். செங்கோட்டையன் என்ன சொல்கிறாரோ அதன்படி நாங்கள் செயல்பட தயாராக இருக்கிறோம். எங்களை நம்பி வந்தவா்களை கடைசி வரை நாங்கள் கைவிட மாட்டோம். நமக்கு எதிராக உள்ள அரசியல் கட்சி பிரமுகா்கள் வீடுகளிலும் நமக்கு ஆதரவு உள்ளது. அவா்கள் தவெக-வுக்கு வாக்களிப்பாா்கள்.

செங்கோட்டையனிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டோம். அவா் வகுக்கும் பாதையில் விஜய் பயணிப்பாா்.

டிசம்பா் 18-ஆம் தேதி நடைபெறும் பிரசார கூட்டத்துக்கு குழந்தைகள், கா்ப்பிணிகள் வர வேண்டாம் என்றாா்.