திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

வேலூர் ஸ்ரீபுரத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, திருப்பதியில் இருந்து வேலூர் ஸ்ரீபுரம் தங்கக் கோயிலுக்கு ஹெலிகாப்டர் மூலம் வருகை தந்ததைப் பற்றி...

News image

திருப்பதியில் இருந்து வேலூர் ஸ்ரீபுரம் தங்கக் கோயிலுக்கு ஹெலிகாப்டர் மூலம் வந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.

Updated On :17 டிசம்பர் 2025, 11:45 am IST

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, திருப்பதியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக வேலூர் ஸ்ரீபுரத்துக்கு வருகை தந்தார்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, டிசம்பர் 16 ஆம் தேதி முதல் 22 வரையிலான சுற்றுப்பயணத்தில் தமிழ்நாடு, கேரளம், தெலங்கானா, ஆந்திரம் ஆகிய இடங்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று(டிச.17) காலை 11.20 மணியளவில் திருப்பதியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வேலூர் ஸ்ரீபுரத்துக்கு வருகை தந்தார்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை வரவேற்ற ஆளுநர் ஆர்,என். ரவி.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை வரவேற்ற ஆளுநர் ஆர்,என். ரவி.

வேலூர் ஸ்ரீபுரம் தங்கக் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேட்டில் ஹெலிகாப்டர் வந்திறங்கியதும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை ஆளுநர் ரவி, மத்திய இணையமைச்சர் முருகன், தமிழக கைத்தறித் துறை அமைச்சர் காந்தி உள்ளிட்டோர் வரவேற்றனர்.

குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி, ஸ்ரீபுரம் கோயிலில் பொதுமக்கள் தரிசனத்துக்கு கட்டுப்பட்டுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீபுரம் தங்கக் கோயிலில் சாமி தரிசனம் செய்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அங்கு சுமார் ரூ. 5 கோடியில் கட்டப்பட்டுள்ள தியான மண்டபத்தையும் திறந்து வைத்தார்.

குடியரசுத் தலைவர் வருகையையொட்டி, இன்று மதியம் 12.30 மணி வரை பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு ட்ரோன்கள் பறக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி, ஸ்ரீபுரம் தங்கக்கோயில், அதைச் சுற்றியுள்ள பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, தமிழ்நாடு சிறப்பு பாதுகாப்புப் படை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஸ்ரீபுரம் தங்கக் கோயில் வளாகத்தில் 2 அடுக்கு பாதுகாப்புடன் ஸ்ரீபுரம் பகுதி முழுவதும் சுமார் 1000 காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Summary

Regarding President Droupadi Murmu's arrival at the Vellore Sripuram Golden Temple from Tirupati by helicopter...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.