நேபாள வெள்ளத்துக்கு நாங்கள் காரணமல்ல - சீனாசிஜேபி செய்தித் தொடர்பாளர்கள் மீது கடும் கோபம்: அபிஜீத் தீப்கே பேச்சு!பொறியாளர்களுக்கு பதிலாக 86% செய்யறிவைப் பயன்படுத்தும் பைசா பஜார் நிறுவனம்!பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனால் அளவு எவ்வளவு? மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம்நாட்டில் ஐபோன் தயாரிப்பை 30 - 35% உயர்த்தும் ஆப்பிள்!மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்களுக்கு ஓராண்டு விடுப்பு! அரசாணை வெளியீடுஈரான் போருக்கு மத்தியில் நாட்டின் ஜிடிபி 7.8% உயர்வு

சென்னையில் பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நவீனுக்கு வரவேற்பு

சென்னை வந்த பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நவீனுக்கு விமான நிலையத்தில் அக்கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.

சென்னை விமான நிலையத்தில் பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நவீன்.

Published On :20 டிசம்பர் 2025, 8:07 pm IST

சென்னை வந்த பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நவீனுக்கு விமான நிலையத்தில் அக்கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பாஜகவின் தேசிய செயல் தலைவராக நிதின் நவீன் தில்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் கடந்த திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

கட்சியின் தேசிய செயல் தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக அவர் சனிக்கிழமை சென்னை வருகை தந்தார்.

சென்னை விமான நிலையம் வந்த அவருக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழிசை சௌந்தரராஜன், கரு. நாகராஜன், குஷ்பு மற்றும் புதுச்சேரி பாஜகவினர் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து அவர் சாலை மார்க்கமாக புதுச்சேரிக்கு சென்றார்.

அங்கு இன்றும் நாளையும் நடக்கும் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுளளது.

Summary

BJP national working president Nitin Nabin, who arrived in Chennai, was welcomed by the party at the airport.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.