கோவையில் அமைந்துள்ள ஜிடி நாயுடு மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த பள்ளி வேனில் இருந்து பின்பக்க டயர் கழன்று ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜிடி நாயுடு மேம்பாலம் மீது பள்ளி வேன் சென்று கொண்டிருந்த போது, திடீரென அந்த வேனிலிருந்து பின் பக்க சக்கரம் கழன்று பின்பக்கமாக ஓடியிருக்கிறது.
ஆனால், இது வேன் ஓட்டுநருக்குத் தெரியவரவில்லை. திடீரென வேன் சக்கரம் இல்லாத பகுதியில் சரிந்து நிற்பதைப் பார்த்த ஓட்டுநர் உடனடியாக வேனை சாலையோரம் பாதுகாப்பாக நிறுத்தினார்.
பிறகு வாகனத்தை சோதனை செய்தபோது டயர் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்து. சக்கரம் எங்கு சென்றது என்பது தெரியாமல், நீண்ட நேரமாக ஓட்டுநர் தேடிய நிலையில், சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் கிடந்த சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டது.
பிறகு, அந்த சக்கரம் வேன் இருந்த இடத்துக்கு உருட்டிக் கொண்டுவரப்பட்டது. இந்த சம்பவத்தால் மேம்பாலத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
எனினும், ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டதால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொய்கை மேம்பாலத்தில் தனியார் பேருந்து தீப்பிடிப்பு!
கேபிள் பதிக்கும் பணி: ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் வாகனங்களுக்கு கட்டுப்பாடு

கோவை ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில் 2 நாள்களுக்கு இரவு நேர போக்குவரத்துக்குத் தடை!

வைக்கோல் ஏற்றிச் சென்ற வேனில் திடீா் தீ
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



