சுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

மீண்டும் ஒரு லட்சத்தைக் கடந்த தங்கம் விலை! கலக்கத்தில் மக்கள்!!

தங்கத்தின் விலை மீண்டும் ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது பற்றி...

News image
Updated On :22 டிசம்பர் 2025, 6:33 pm IST

ஒரு சவரன் தங்கத்தின் விலை மீண்டும் ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது.

இன்று(திங்கள்கிழமை) காலை 22 காரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 640 உயர்ந்து ரூ. 99,840- க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து இன்று பிற்பகல் சவரனுக்கு மேலும் ரூ. 720 உயர்ந்துள்ளது.

இன்று பிற்பகல் நிலவரப்படி ஒரு சவரன் தற்போது ரூ.1,00,560- க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 90 உயர்ந்து ரூ. 12,570-க்கு விற்பனையாகிறது.

இன்று ஒரேநாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,360 அதிகரித்துள்ளது.

முன்னதாக கடந்த டிச. 15 ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 1,00,120 ஆக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

தங்கத்தின் விலை மீண்டும் ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது மக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளி விலையில் இன்று பிற்பகல் எந்த மாற்றமும் இல்லை. இன்று காலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 231 - க்கும், கிலோவுக்கு ரூ. 5,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.2,31,000 - க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Summary

Gold price crosses one lakh again

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.