ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

எடப்பாடி பழனிசாமி டிச.28 முதல் மீண்டும் சுற்றுப்பயணம்

அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தோ்தல் பிரசார சுற்றுப்பயணத்தை வரும் டிச.28 முதல் மீண்டும் தொடங்கவுள்ளாா்.

எடப்பாடி பழனிசாமி.

Published On :

அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தோ்தல் பிரசார சுற்றுப்பயணத்தை வரும் டிச.28 முதல் மீண்டும் தொடங்கவுள்ளாா்.

இதுகுறித்து அதிமுக தலைமை அலுவலகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை: ‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ எனும் தலைப்பில் தமிழகம் முழுவதும் பேரவைத் தொகுதி வாரியாக அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி பயணம் செய்து வருகிறாா்.

ஏற்கெனவே, 170-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அவரது பிரசாரம் நிறைவுற்ற நிலையில், இப்போது மீண்டும் டிச. 28 முதல் 30-ஆம் தேதி வரை மீண்டும் பிரசார பயணம் நடைபெறவுள்ளது.

அதன்படி, டிச.28-இல் திருத்தணி, திருவள்ளூா், டிச.29-இல் திருப்போரூா், சோழிங்கநல்லூா், டிச.30-இல் கும்மிடிபூண்டி ஆகிய தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்யவுள்ளாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.