காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

புதிய உச்சத்தைத் தொட்ட தங்கம் விலை! சவரனுக்கு மேலும் ரூ. 1,600 உயர்ந்தது!!

இன்றைய தங்கம், வெள்ளி விலை பற்றி...

தங்கம் விலை. - படம்: பிடிஐ

Published On :

தங்கத்தின் விலை ஒரு லட்சத்தைக் கடந்த நிலையில் இன்று சவரனுக்கு மேலும் ரூ. 1,600 உயர்ந்துள்ளது.

நேற்று(திங்கள்கிழமை) காலை 22 காரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 640 உயர்ந்த நிலையில், மாலை மேலும் ரூ. 720 உயர்ந்தது. அதாவது நேற்று ஒரேநாளில் சவரனுக்கு ரூ. 1,360 அதிகரித்து ரூ.1,00,560- க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று(செவ்வாய்க்கிழமை) தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ. 1,600 உயர்ந்து ரூ. 1,02,160-க்கு விற்பனையாகிறது.

கிராமுக்கு ரூ. 200 உயர்ந்து ரூ. 12,770-க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை இது புதிய உச்சமாகும்.

முன்னதாக கடந்த டிச. 15 ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 1,00,120 ஆக உயர்ந்து பின்னர் குறைந்த நிலையில் நேற்று மீண்டும் ஒரு லட்சத்தைக் கடந்தது குறிப்பிடத்தக்கது.

தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளி விலை இன்று காலை கிராமுக்கு ரூ. 3 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 234 - க்கும், கிலோவுக்கு ரூ. 3,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.2,34,000 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Summary

Chennai gold and silver rate today

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.