ஊழலைக் குறைத்தாலே போதும்; மதுவிற்று வருவாயை அதிகரிக்க வேண்டும் என்ற கட்டாயம் அரசுக்கு இல்லை: அமைச்சர் விக்னேஷ்ஆன்லைனில் டாஸ்மாக் மதுபானத்தை முன்பதிவு மட்டுமே செய்ய முடியும்; வீடுகளுக்கு டெலிவரி கிடையாது: அமைச்சர் விக்னேஷ்வல்லுறவு வழக்கு! பத்திரிகையாளர் தருண் தேஜ்பாலுக்கு 10 ஆண்டுகள் சிறை!அரசுப் பேருந்து பலகையில் தக்காளி வெற்றிக் கழகம்! என்னவானது? போக்குவரத்துக் கழகம் விளக்கம்விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிக்கு பயிர்க்கடன் வழங்கப்படும்! அமைச்சர்விரைவில் பிளாஸ்டிக் ரூ.10, ரூ.20 தாள்கள்! புழக்கத்தில் இருக்கும் பணம் என்னவாகும்?நிலவில் மோதிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் பகுதி! அதிர்ச்சி விடியோ! எவ்வளவு பெரிய பள்ளம்?அடுத்த ஜென்மம் எதற்கு? இப்போதே விவசாயிகளுக்கு செய்யலாமே! பிரேமலதாதைரியம் இருந்தால் முதல்வர் வாயைத் திறக்கட்டும்! உதயநிதி சவால்! வறட்சி பற்றி பேசாமல், புகழ்ச்சி பாடி முதல்வரின் உச்சிகுளிர பாராட்டு மழை: ஸ்டாலின்வளமான தமிழ்நாட்டை நோக்கிய நமது வெற்றிப் பயணம் தொடரட்டும்: முதல்வர் விஜய்உருப்படியாக எதுவுமில்லை! வேளாண் பட்ஜெட்டை விமர்சித்த உதயநிதி! அமைச்சர் ஆனந்துடன் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் அணி சந்திப்பு!கரூரில் தென்னை நாற்றுப்பண்ணை! பட்ஜெட்டில் தென்னை, பனை பாதுகாப்புத் திட்டங்கள்!வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்: எடப்பாடி பழனிசாமிதஞ்சாவூரில் நம்மாழ்வார் வேளாண் பாலிடெக்னிக் கல்லூரி! பட்ஜெட்டில் அறிவிப்பு!எல் நினோவால் 12 மாவட்டங்கள் பாதிக்கப்படும் அபாயம்! அமைச்சர் வினோத் உரைதமிழக வேளாண் பட்ஜெட்! வெற்றி விவசாய விருதுகள் அறிவிப்புஉயிர்ம உர விவசாயத்தில் சிறந்து விளங்குவோருக்கு நம்மாழ்வார் விருதுவிவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கு ரூ. 7,432 கோடி ஒதுக்கீடு!
/

இபிஎஸ் உடன் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசவில்லை : நயினார்

எடப்பாடி பழனிசாமியுடன் தொகுதிப் பங்கீடு குறித்து எதுவும் பேசவில்லை என்றார் நயினார் நாகேந்திரன்..

News image

செய்தியாளர் சந்திப்பில் நயினார் நாகேந்திரன்

Updated On :23 டிசம்பர் 2025, 6:20 pm IST

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் தொகுதிப் பங்கீடு குறித்து எதுவும் பேசவில்லை என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று (டிச., 23) தெரிவித்தார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுகவுக்கு 170 தொகுதிகள் வரையும், ராமதாஸ் - அன்புமணி என இரு தரப்புக்கும் 23 தொகுதிகள், தேமுதிகவுக்கு 6 தொகுதிகள், டிடிவி தினகரனுக்கு 6 தொகுதிகள், ஓ.பன்னீர் செல்வத்துக்கு 3 தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் நயினார் நாகேந்திரன் இந்த விளக்கத்தை அளித்தார்.

தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பிறகு முதல்முறையாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் இன்று (டிச., 23) காலை தமிழகத்திற்கு வருகைத்தந்தார்.

பாஜக நிர்வாகிகளின் மையக் குழுக் கூட்டத்தில் பங்கேற்று மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து, சென்னை தனியார் விடுதியில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பியூஸ் கோயல் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து ஆலோசனையில் பேசியவை குறித்து நயினார் நாகேந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,

''பியூஷ் கோயலுடன் அரசியல் கள நிலவரம் குறித்துப் பேசினோம். வாக்கு சதவீதம், நடந்துமுடிந்த தேர்தல் விவரங்கள் குறித்து மட்டுமே பேசினோம். ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் குறித்து எதுவும் பேசவில்லை.

அரசியல் கட்சிகளுடனான கூட்டணி பங்கீடுகள் குறித்து எதுவும் பேசவில்லை. பேச்சுவார்த்தையில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக எடப்பாடி கே பழனிசாமியுடன் பேசவில்லை.

திமுக அகற்றப்பட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். ஒத்தக் கருத்து கொண்டவர்கள் ஒன்று சேர வேண்டும்.

யூடியூபில் ஒவ்வொருவரும் தங்கள் கருத்துகளைக் கூறி வருகின்றனர். இதோடுமட்டுமின்றி இப்போது அனைவரும் கருத்துக்கணிப்புகளை நடத்துகின்றனர். இதனை கருத்தில் கொள்ள முடியாது'' எனக் குறிப்பிட்டார்.

Summary

We have not discussed seat-sharing with EPS: Nainar Nagendran

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.