
எடப்பாடி பழனிசாமி டிச.28 முதல் மீண்டும் சுற்றுப்பயணம்
அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தோ்தல் பிரசார சுற்றுப்பயணத்தை வரும் டிச.28 முதல் மீண்டும் தொடங்கவுள்ளாா்.

எடப்பாடி பழனிசாமி.
அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தோ்தல் பிரசார சுற்றுப்பயணத்தை வரும் டிச.28 முதல் மீண்டும் தொடங்கவுள்ளாா்.
இதுகுறித்து அதிமுக தலைமை அலுவலகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை: ‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ எனும் தலைப்பில் தமிழகம் முழுவதும் பேரவைத் தொகுதி வாரியாக அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி பயணம் செய்து வருகிறாா்.
ஏற்கெனவே, 170-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அவரது பிரசாரம் நிறைவுற்ற நிலையில், இப்போது மீண்டும் டிச. 28 முதல் 30-ஆம் தேதி வரை மீண்டும் பிரசார பயணம் நடைபெறவுள்ளது.
அதன்படி, டிச.28-இல் திருத்தணி, திருவள்ளூா், டிச.29-இல் திருப்போரூா், சோழிங்கநல்லூா், டிச.30-இல் கும்மிடிபூண்டி ஆகிய தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்யவுள்ளாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





