பெரியார் காட்டிய சமத்துவப் பாதையில் பயணிப்போம்: விஜய்

தந்தை பெரியாரின் நினைவு நாளையொட்டி தவெக தலைவர் விஜய் பதிவு.
தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்
Updated on
1 min read

தந்தை பெரியார் அவர்கள் காட்டிய சமத்துவப் பாதையில் பயணித்து, சமூக நீதியை வென்றெடுக்க உறுதியேற்போம் என்று தவெக தலைவர் விஜய் பதிவிட்டுள்ளார்.

தந்தை பெரியாரின் நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி பெரியாரின் சிலை மற்றும் அவரது உருவப்படத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக, தவெக தலைவர் விஜய் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”சமூக நீதியின் முன்னோடி, சமூகத்தில் புரையோடிப்போயிருந்த மூட நம்பிக்கைகளையும், ஏற்றத் தாழ்வுகளையும் தகர்த்தெறியப் போராடிய பகுத்தறிவுப் போராளி, எமது கொள்கைத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாளில், அவரின் திருவுருவப் படத்திற்கு எமது அலுவலகத்தில் மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினேன்.

தந்தை பெரியார் அவர்கள் காட்டிய சமத்துவப் பாதையில் பயணித்து, சமூக நீதியை வென்றெடுக்க உறுதியேற்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

Tamizhaga Vetri Kazhagam leader Vijay's post on the occasion of Periyar death anniversary.

தவெக தலைவர் விஜய்
முதல்வர் தொடக்கி வைத்த வால்வோ பேருந்து! புதிய வசதிகள் என்னென்ன?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com